LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

யாருக்கும் தெரியாத அழுகை

நகரின் பெருங்கடைக்கு
விழாத்துணி எடுக்கச் சென்றோம்.
சுற்றத்தார் சூழ
பட்டுப்பிரிவில் அமர்ந்தோம்.

எங்களை அடுத்து
மணவிழாக் கூட்டம் ஒன்று
குடும்பப் பெண்டிர் சூழ வந்தமர்ந்தது.

அவர்களில்
மணப்பெண் போன்ற ஒருத்தி
என்னை அடுத்தமர்ந்தாள்.

அவள் கண்களில்
இருந்த தூய்மைபோல்
இதுவரை கண்டதில்லை நான்.

துணி நயம் தேர்ந்து
எம் உற்றாரோடு மகிழ்ந்து சிரித்திருந்தேன்.

வந்திருந்த கும்பலில்
சுருள் மீசைப் பெரியவர் சொல்லுக்கு
எல்லாரும் பணிந்தனர்.

அவர் குரல்
அதிகாரத்தின் உச்சியிலிருந்தே
உதிர்ந்துகொண்டிருந்தது.

எங்கள் சிரிப்புக்கிடையில்
ஒரு விகசிப்பின் சிற்றொலிகளை
நான் கேட்க நேர்ந்தது.

குழு தனித்து
ஓரம் அமர்ந்த அப்பெண்
நீர்ச்சுனைபோல்
தனக்குள் நனைவதுபோல்
அழுதுகொண்டிருந்தாள்.

எங்கள் சிரிப்பிலிருந்து
துண்டித்துக்கொண்டு
வலம் திரும்பி அவளைப் பார்த்தேன்.

யாரும் அறியாத அவள் அழுகையை
நான் கையும் களவுமாகக் கண்டுவிட்டேன்.

நான் கண்ணுற்றதை
அவள் கண்டுவிட்டாள்.
நீர் ததும்பும் விழிகளால்
என்னை மிரள நோக்கினாள்.
என் ரகசிய அழுகையோடு
உனக்கென்ன வேடிக்கை என்றது அவள் பார்வை.

அவர்களிடத்தே
பழுத்துதிர்ந்த மகிழ்ச்சிக்கு
அவள் தேம்பல் பொருத்தமாயில்லை.
நான் உட்சுருங்கி வாடினேன்.
என் வாட்டம்
அவளுக்குத் தெரிந்துவிட்டது என நினைக்கிறேன்.

எங்கிருந்தோ
மூத்தவள் ஒருத்தி வந்தாள்.
‘அழாம சிரிச்சிகிட்டு இரு.
மானத்தை வாங்காதே…’ என்று
அவள் மன்றாடினாள்.

அவள் அழுகை துடைத்து
இயல்பானவள் போல்
பாசாங்குப் பாவனை செய்தாள்.

அவளுக்கு விருப்பற்ற மண ஏற்பாடோ ?
அவள் தன்மானத்தைப் பொசுக்கும்
ஒரு சொல் தீண்டியதோ ?
எங்கோ
அவள் பற்றியிருந்த எதுவோ
முறிக்கப்பட்டதோ ?
எனக்குத் தெரியவில்லை.

துணித் தேர்வு முடிந்து
எங்கள் ஆட்கள் கிளம்பலானார்கள்.
நானும் எழுந்தேன்.

கொஞ்சம் நடந்து
ஏதோ உறுத்தலோடு திரும்பி
அவளைப் பார்த்தேன்.
அவள்
சற்றுமுன் அழுத ஈரக்கண்களால்
என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 17 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.