LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

யாருக்காக வாழ்வேன்

ஊர் ஊராய் அலைந்தேன்

உயிரைக் கொடுத்து உழைத்தேன்!

கால் வயிற்று உணவோடு

காசை எண்ணிச் சேர்த்தேன்!

கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து

அன்பு மகளை வளர்த்தேன்!

என் ஆசையெல்லம் அடக்கிக் கொண்டு

அவள் ஆசையிலே விதைத்தேன்!

சிறுகச் சிறுக பணத்தை சேர்த்து

சிறந்த பள்ளியில் சேர்த்தேன்!

சிரிக்க மலரும் முகத்தைப் பார்த்து

என் துன்பங்களை தொலைத்தேன்!

இரவும் பகலும் மார்பில் சுமந்து

அவள் இதயத்துடிப்பை ரசித்தேன்!

பொழுதும் முழுதும் அவளுக்காக

நான் புழுவாகத் துடித்தேன்!

என் வாழ்வை உருக்கி

அவள் வாழ்வை சிற்பமாக்க நினைத்தேன்!

நல்ல கல்லூரியில் சேர்த்துவிட்டு

காசை அள்ளி இறைத்தேன்!

என் பிள்ளை நல்ல பிள்ளையென்று

ஊரே சொல்லித் திரிந்தேன்!

என் உள்ளம் கிழிந்து எரிந்துபோக

அவள் ஊரைச் சுற்றப் பார்த்தேன்!

நான் கஷ்டபட்ட காசை எல்லாம்

அவள் காதலிலே அழித்தாள்!

தான் இஷ்டப்பட்ட ஒருத்தனோடு

இஷ்டத்துக்கு அலைந்தாள்!

ஊரே என்னை ஏய்க்கும்போதும்

என் பிள்ளைக்காக வாழ்ந்தேன்!

என் பிள்ளையே ஏய்க்கும்போது

யாருக்காக வாழ்வேன்!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: யாருக்காக வாழ்வேன்   Yarukkaga Vaalven   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Yarukkaga Kavithai   Kavithai about Yarukkaga  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.