தாய் மண்ணின் விடுதலைக்காகப் போராடும் போராளிகளின் தலைவன் பிரம்மன், சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த பார்க்கிறான். தனது குழுவிலிருந்த அனைவரும் எதிர்அணியில் இருப்பதை, தனது காதலி காவியா எழுதிவைத்திருந்த குறிப்பிலிருந்து அறிகிறான். அடிமைகள் கண்காட்சி நடத்தும் இடத்திற்கு ஆவேசமாக செல்ல அங்கே பிரம்மனை பிடிக்க எதிரி அணி முயல தப்பிக்கிறான்.
தப்பித்து காட்டில் இருந்தே தனி மனிதனாக பழிக்குப்பழி வாங்க துடிக்கிறான். ஒரு கட்டத்தில் மூன்று மத விழாக்களும் ஒன்றாக ஒரே நாளில் வருவதை அறிந்து, அன்று தனது பழைய போராளிகளைத் தீர்த்துக்கட்ட, குண்டுகளைப் புதைத்து வைக்கிறான். அவர்களைக் கொல்ல, விழாவிற்கு வரும் மக்களை கொல்ல வேண்டுமா என மனம் மாறுகிறான்.
எஞ்சியிருக்கும் மக்களுக்காக ஆயுத வழி வேண்டாம், அஹிம்சை வழியிலே போராடுவோம் என்று பிரம்மன் அழைக்க, பிரம்மாவின் பழைய நண்பன் திருந்தியவன் போல நடித்து, அவனருகே வந்து சுடுகிறான் மீண்டும் போராட்டம் தொடர்கிறது விடுதலையை நோக்கி.
இப்படத்தின் கதாநாயகன் வெங்கி ஒரு வழக்கறிஞர், தமிழ்திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒருவர் மட்டுமே நடித்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கருங்கல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் 100 அடி உயரத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்தார் ஹீரோ.
தமிழ்நாடு, கர்நாடகா, எல்லையில் உள்ள தேவர் பெட்டாவில் 1000 அடி உயரமுள்ள பாறையில் துணிச்சலாக ஏறினார். இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அடர்ந்த காடுகளில் நடைபெற்றது. ஜவ்வாதுமலை, ஏலகிரி, செஞ்சி, பாண்டிச்சேரி, தேவர்பேட்டா, ஒசூர், பஞ்சபள்ளி அணை, மாமல்லபுரம், ரத்தினகிரி போன்ற வனப்பகுதிகளிலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஒன்று சேரும் வனப்பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.
இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் எந்தவித கட் இல்லாமல் """"யு"" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. ஜனவரி குடியரசு தினத்தன்று இப்படம் திரையிடப்படுகிறது.
|