LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழ்திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் யாருக்காக !!

தாய் மண்ணின் விடுதலைக்காகப் போராடும் போராளிகளின் தலைவன் பிரம்மன், சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த பார்க்கிறான். தனது குழுவிலிருந்த அனைவரும் எதிர்அணியில் இருப்பதை, தனது காதலி காவியா எழுதிவைத்திருந்த குறிப்பிலிருந்து அறிகிறான். அடிமைகள் கண்காட்சி நடத்தும் இடத்திற்கு ஆவேசமாக செல்ல அங்கே பிரம்மனை பிடிக்க எதிரி அணி முயல தப்பிக்கிறான்.


தப்பித்து காட்டில் இருந்தே தனி மனிதனாக பழிக்குப்பழி வாங்க துடிக்கிறான். ஒரு கட்டத்தில் மூன்று மத விழாக்களும் ஒன்றாக ஒரே நாளில் வருவதை அறிந்து, அன்று தனது பழைய போராளிகளைத் தீர்த்துக்கட்ட, குண்டுகளைப் புதைத்து வைக்கிறான். அவர்களைக் கொல்ல, விழாவிற்கு வரும் மக்களை கொல்ல வேண்டுமா என மனம் மாறுகிறான்.

எஞ்சியிருக்கும் மக்களுக்காக ஆயுத வழி வேண்டாம், அஹிம்சை வழியிலே போராடுவோம் என்று பிரம்மன் அழைக்க, பிரம்மாவின் பழைய நண்பன் திருந்தியவன் போல நடித்து, அவனருகே வந்து சுடுகிறான் மீண்டும் போராட்டம் தொடர்கிறது விடுதலையை நோக்கி.

இப்படத்தின் கதாநாயகன் வெங்கி ஒரு வழக்கறிஞர், தமிழ்திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒருவர் மட்டுமே நடித்ததுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.
கருங்கல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் 100 அடி உயரத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்தார் ஹீரோ.

தமிழ்நாடு, கர்நாடகா, எல்லையில் உள்ள தேவர் பெட்டாவில் 1000 அடி உயரமுள்ள பாறையில் துணிச்சலாக ஏறினார். இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறுகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அடர்ந்த காடுகளில் நடைபெற்றது. ஜவ்வாதுமலை, ஏலகிரி, செஞ்சி, பாண்டிச்சேரி, தேவர்பேட்டா, ஒசூர், பஞ்சபள்ளி அணை, மாமல்லபுரம், ரத்தினகிரி போன்ற வனப்பகுதிகளிலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா  ஒன்று சேரும் வனப்பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் எந்தவித கட் இல்லாமல் """"யு"" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. ஜனவரி குடியரசு தினத்தன்று இப்படம் திரையிடப்படுகிறது.

by Swathi   on 19 Jan 2015  0 Comments
Tags: Yarukkaga   யாருக்காக   வெங்கி   Venki           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.