LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

என் தேடலின் தடங்கள்

என் தேடல்
என் அறிவின் உதயத்தில் தொடங்க
என்னோடு பயணித்தபடி இருக்கிறது
எது எனத்தேடல் என்று அறியுமுன்
அகவை ஐம்பது கடந்த போதிலும்
என் தேடலின் சுவாரசியம் மட்டும்
இன்னும் அதே வேகத்தோடு
என் நிழலை விட நெருக்கமாய் தொடர்கிறது
கல்வியை தேடி அலைந்த நான்
கல்விக்கூடங்களோடு நின்று விடாமல்
காணும் ஒவ்வொன்றிலும் தேட தேட
காட்சிகள் யாவும் பாடங்களாய் நின்றது
பட்டங்கள் தராத நிறைவை என்
பட்டறிவு எனக்குள்ளே நிறைத்தது
பதக்கங்கள் பாராட்டுகள் தராத களிப்பை
பகலும் இரவும் எனக்கு தந்து தந்து போனது
எட்டி பிடிக்க முடியாத மாய மான்
என் தேடல் என்பதை
என் மனம் எத்தனையோ முறை கூறியும்
எனோ என் அறிவு
தேடலின் சிகரம் தொட முயல்கிறது
யாக்கையின் நிறைவு வரை
என் தேடல் பயணம் தொடரும் என்று
எத்தனையோ பேர் ஏளனம் செய்த போதும்
எனோ துவளாமல்
புது புது பாதைகளை தேடி
என் விழிகளும் கால்களும்
பயணித்தபடி இருக்கிறது
ஏக்கம் அது மட்டும் இல்லாமல்
எனக்கின்றி போயிருந்தால்
என் தேடலின் முடிவு என்றோ தெரிந்திருக்கும்
ஏக்கமும் அதன் தாக்கமும்
என்னுள் தொடர்ச்சியாய் இருப்பதால் தானோ
என் தேடல் இன்னும் தொடர்ந்தபடி இருக்கிறது
எது என் தேடல் எது என் தேவை
என்று எனக்கே தெரியாமல்
எதையோ தேடி பயணித்தபடி
நானும் என் மனமும்
புது புது வழிகளில் புகுந்து புறப்படுகிறேன்
என் தேடலின் நிறைவை
என்று நான் அடைவேனோ
என்னை இந்த உலகிற்கு தந்தவனிடமே கேட்க
என்னை ஆள்பவனே எனக்கு காட்டட்டும்
தேடலுடன் முடிவினை அறியாமல் கவிதையை முடிக்கும்

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.