|
||||||||
எனது நகரத்தின் பைத்தியக்காரி |
||||||||
இன்றும் எனது நகரம்
கையையும் வாயையும் பொத்தி
மௌனித்திருக்கிறது.
இடைக்கிடை இப்படித்தான் விரதம் அனுஷ்டிக்கும் எனது நகரம்
இன்றும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில்
நோன்பிருக்கிறது.
பாதைகள்
சூரியன் பட்டுப் பொசுங்கின.
முதுகு சொறிந்து ஆறுதல் சொல்ல
ஒரு மனிதனின் காலடி இல்லை.
அவள்,
அந்தப் பைத்தியக்காரி
எந்த மூலையில் ஒரு கேள்விக்குறி மாதிரிக்
கிடப்பாள்?
அந்த ஊத்தைக் கூடாரம்
இன்று
நடமாடித் திரியாது.
அவள் எனது நகரத்தின் சின்னம்.
தெருப் பசுக்களையும் வெற்றுத் தகரங்களையும் கூட
நேசிக்கத் தெரிந்த ஒருத்தி.
இன்று
நகரமே இல்லை!
விடிந்திருந்தும், நடமாடப் போகிற வௌிச்சம் குவிந்திருந்தும்
குதிவெட்டப் பட்டவர்கள் போல
மனிதர்கள் ஊரடங்கிக் கிடப்பதால்.
அவள் இன்னும் ஆடைகளை உரிந்து எறிந்திருப்பாள்.
இந்த நகருக்குச் சின்னமாய்த் திகழ
இஷ்டமில்லை எனக்கு, ஒரு மந்தியை வையுங்கள்
என்பதனைப் போல....
இன்றும் எனது நகரம் கையையும் வாயையும் பொத்தி மௌனித்திருக்கிறது.
இடைக்கிடை இப்படித்தான் விரதம் அனுஷ்டிக்கும் எனது நகரம் இன்றும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் நோன்பிருக்கிறது.
பாதைகள் சூரியன் பட்டுப் பொசுங்கின. முதுகு சொறிந்து ஆறுதல் சொல்ல ஒரு மனிதனின் காலடி இல்லை.
அவள், அந்தப் பைத்தியக்காரி எந்த மூலையில் ஒரு கேள்விக்குறி மாதிரிக் கிடப்பாள்? அந்த ஊத்தைக் கூடாரம் இன்று நடமாடித் திரியாது.
அவள் எனது நகரத்தின் சின்னம். தெருப் பசுக்களையும் வெற்றுத் தகரங்களையும் கூட நேசிக்கத் தெரிந்த ஒருத்தி.
இன்று நகரமே இல்லை! விடிந்திருந்தும், நடமாடப் போகிற வௌிச்சம் குவிந்திருந்தும் குதிவெட்டப் பட்டவர்கள் போல மனிதர்கள் ஊரடங்கிக் கிடப்பதால்.
அவள் இன்னும் ஆடைகளை உரிந்து எறிந்திருப்பாள். இந்த நகருக்குச் சின்னமாய்த் திகழ இஷ்டமில்லை எனக்கு, ஒரு மந்தியை வையுங்கள் என்பதனைப் போல....
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|