|
||||||||
எங்களின் இளமைக்காலம் |
||||||||
கடலை மிட்டாயும், கம்மர் கட்டும், வாயில் ஊறியது
அந்த காலம் !
குச்சி ஐஸின் வழியும்
நீரை உதட்டில் சுவைத்தது
அந்த காலம் !
ஐந்து பைசாவுக்கு பயாஸ்கோப்பை
குறுகிய சந்தில் பார்த்து
மகிழ்ந்தது அந்த காலம் !
குச்சியில் வைத்த பொம்மை மிட்டாய்
இழுவையாய் எடுத்து கையில்
சுற்றி “கடிகாரம்” சொல்லி மகிழ்ந்தது
அந்த காலம்
வட்டத்தில் வைத்த பம்பர கட்டை
சாட்டையாய் சுற்றி குத்தி
எடுத்த்து அந்த காலம்
சுவரின் ஒரம் கட்டம் போட்டு
கோலி குண்டை அதனுள் எறிந்து
“எதிரா பேக்கா கேள்வியை”
கேட்டு அடித்தது அந்த காலம்
“அஞ்சலத்தான் குஞ்சு” ஆறு
முக்க தக்கடி, ஏழுவாலிங்கம்,
எட்டாச்சி கோட்டை, தொம்பரிங்க
பேட்டை, என்று குண்டு
விளையாடியது அந்த காலம்
பெண்களின் கால்கள் நொண்டி
அடித்து “ரைட்டா” என்று
குதித்தது அந்தகாலம்
பெண்களின் கண்கள் சுழல,
கைகள் பின்ன, மேலே
வீசிய கற்கள் கீழே
விழு முன் பொறுக்கி எடுத்தது
அந்த காலம்
புளியங்க்கொட்டை பங்கை
பிரித்து குழிகளில் நிரப்பி
கணக்கை போட்டது அந்த காலம்
அடிதடி போட்டு கபடிகள்
ஆடி கைகால் உடைத்தது
அந்த காலம் !
வேட்டை என்று வீரமாய்
ஓணான் பிடித்த்து
அந்த காலம்
வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சி,
பொன் வண்டு தீப்பெட்டிக்குள்
வதை பட்டது அந்த காலம்
ஒன்று, இரண்டு, மூன்று
ஐந்து, பத்து, நாணயங்கள்
எங்கள் கைகளில் புரண்டு
ஓடியது அந்த காலம்
ஐம்பதில் இருக்கும் எங்கள்
இளமை வாழ்க்கை
இனிமையாய் கழிந்தது,
நினைத்து பார்த்து மகிழுகிறோம் |
||||||||
My earlier life | ||||||||
by Dhamotharan.S on 30 Mar 2017 0 Comments | ||||||||
Tags: Ilamai kaalam இளமைக்காலம் எங்களின் இளமைக்காலம் Ilamai Kavithai இளமை கவிதை | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|