LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

எங்களின் இளமைக்காலம்

கடலை மிட்டாயும், கம்மர்

கட்டும், வாயில் ஊறியது

 

அந்த காலம் !

 

 

 

குச்சி ஐஸின் வழியும்

 

நீரை உதட்டில் சுவைத்தது

 

அந்த காலம் !

 

 

 

ஐந்து பைசாவுக்கு பயாஸ்கோப்பை

 

குறுகிய சந்தில் பார்த்து

 

மகிழ்ந்தது அந்த காலம் !

 

 

 

குச்சியில் வைத்த பொம்மை மிட்டாய்

 

இழுவையாய் எடுத்து கையில்

 

சுற்றி “கடிகாரம்”  சொல்லி மகிழ்ந்தது

 

அந்த காலம்

 

 

 

வட்டத்தில் வைத்த பம்பர கட்டை

 

சாட்டையாய் சுற்றி குத்தி

 

எடுத்த்து அந்த காலம்

 

 

 

சுவரின் ஒரம் கட்டம் போட்டு

 

கோலி குண்டை  அதனுள் எறிந்து

 

“எதிரா பேக்கா கேள்வியை”

 

கேட்டு அடித்தது அந்த காலம்

 

 

 

“அஞ்சலத்தான் குஞ்சு” ஆறு

 

முக்க தக்கடி, ஏழுவாலிங்கம்,

 

எட்டாச்சி கோட்டை, தொம்பரிங்க

 

பேட்டை, என்று குண்டு

 

விளையாடியது அந்த காலம்

 

 

 

பெண்களின் கால்கள் நொண்டி

 

அடித்து “ரைட்டா” என்று

 

குதித்தது அந்தகாலம்

 

 

 

பெண்களின் கண்கள் சுழல,

 

கைகள் பின்ன, மேலே

 

வீசிய கற்கள் கீழே

 

விழு முன் பொறுக்கி எடுத்தது

 

அந்த காலம்

 

 

 

புளியங்க்கொட்டை பங்கை

 

பிரித்து குழிகளில் நிரப்பி

 

கணக்கை போட்டது அந்த காலம்

 

 

 

 

 

அடிதடி போட்டு கபடிகள்

 

ஆடி கைகால் உடைத்தது

 

அந்த காலம் !

 

 

 

வேட்டை என்று வீரமாய்

 

ஓணான் பிடித்த்து

 

அந்த காலம்

 

 

 

வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சி,

 

பொன் வண்டு தீப்பெட்டிக்குள்

 

வதை பட்டது அந்த காலம்

 

 

 

ஒன்று, இரண்டு, மூன்று

 

ஐந்து, பத்து, நாணயங்கள்

 

எங்கள் கைகளில் புரண்டு

 

ஓடியது அந்த காலம் 

 

 

 

ஐம்பதில் இருக்கும் எங்கள்

 

இளமை வாழ்க்கை

 

இனிமையாய் கழிந்தது,

 

நினைத்து பார்த்து மகிழுகிறோம்

My earlier life
by Dhamotharan.S   on 30 Mar 2017  0 Comments
Tags: Ilamai kaalam   இளமைக்காலம்   எங்களின் இளமைக்காலம்   Ilamai Kavithai   இளமை கவிதை        
 தொடர்புடையவை-Related Articles
எங்களின் இளமைக்காலம் எங்களின் இளமைக்காலம்
இளமையில் இளமையில்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.