LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பழநிபாரதி

எங்கிருந்து அனுப்புகிறாய் .....

எங்கிருந்து அனுப்புகிறாய் 
அலை புரளும் இந்த பரவசத்தை 

மாம்பழக்காலம் விடைபெற்ற பொழுது 
நடுங்கி உதிர்ந்த மலரொன்றை 
உள்ளங்கையில் ஏந்தி 
நீ உரையாடிய சொற்கள் 
மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளன 

எங்கிருந்து எழுதுகிறாய் 
இளவேனில் பருவத்தின் 
இந்த முன்குறிப்புகளை 

உன் அழகு 
ஒளியாக விளையாடுகிறது 
உன் பெயர் 
நறுமணமாகப் பரவுகிறது 

உன் நினைவின் சமவெளியில் நடக்கிறேன் 
முத்தச் சுவையோடு 
உள்நாக்கில் 
ஒரு திராட்சையை உருட்டிக்கொண்டு 

by Swathi   on 25 Feb 2014  0 Comments
Tags: எங்கிருந்து அனுப்புகிறாய்   அனுப்பு   Yenkirunthu Anupukiraai              
 தொடர்புடையவை-Related Articles
எங்கிருந்து அனுப்புகிறாய் ..... எங்கிருந்து அனுப்புகிறாய் .....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.