அன்று ஞாயிற்றுக் கிழமை... எப்பவும் போல் மணிவண்ணன் அந்த வேலையைச் செய்யத் தொடங்கினான். அது என்ன வேலை தெரியுமா? அறையைக் கூட்டிப் பெருக்கும் வேலை.
மணிவண்ணன் அடிக்கடி சொல்லிக்கற ஒரு வாக்கியம் உண்டு. " எந்தெந்தப் பொருள் எங்கெங்கே இருக்ணுமோ அந்தந்த பொருள் அங்கங்கே இருக்கணும் '' அப்படீங்கறதுதான் அந்த வாக்கியம்.
மணிவண்ணன் கையில் விளக்குமாறோட அறைக்குள்ளே நுழைந்தான். அப்போது அவனைப் பாரத்தா துப்பாக்கியோட போருக்குப் புறப்பட்ட வீரனைப் போலிருந்தான். அவளோட தங்க மணிமேகலை" என்ன யுத்தம் தொடங்கியாச்சா? '' அப்படீண்ணு கேலிசெய்தாள்.
அதுக்கெல்லாம் மணிவண்ணன் அசையமாட்டான். " ஆமாம், இதுவும் யுத்தம்தான். அழுக்கோட நடத்தற யுத்தம். அறையிருந்து தூசை நீக்கற யுத்தம் '' அப்படீண்ணு சொல்வான் மணிவண்ணன்.
விளக்குமாறுடன் அறைக்குள் நுழைந்தவன். சுவரோட மூலை முடுக்கெல்லாம் பார்த்தான்.
" அங்கங்கு ஓட்டடை... இந்த எட்டுகால் பூச்சிக்கு எப்படித்தான் இந்தத் திறமை வருகிறதோ...! தலையைக் குனிஞ்சு நிமிந்து பாக்கறதுக்குள்ளே வலையைப் பின்னிடுது...!!
'' மணிவண்ணன் மனசுக்குள்ளே பேசிக்கிகொண்ட்டான். விளக்குமாறை தலைக்கு மேலாப் பிடித்துகிட்டு சுவர் இடுக்கில் இருக்கிற ஓட்டடையைக் களைய முயற்சி செய்தான். எம்பி எம்பிக் குதித்தான். விளக்குமாறை வீசினான்.. ம்ஹூம் அது எட்டவே இல்லை.
மணிவண்ணன் மேசைகிட்ட இருந்த நாற்காளியை இழுத்து அதுக்கு மேலே ஏறி நின்றான். அப்படி ஏறும்போது கையில் பிடித்திருந்த விளக்குமாறோட ஒரு நுனி சிலந்தி வலையை அசைத்தது..
" ஆகா.. ஏதோ ஓர் இரை வசமாகி மாட்டிகிட்டது என்று நினைத்தது...'' எட்டுகால் பூச்சி சந்தோஷமா ஒளிஞ்சுகிட்டிருந்த இடத்தை விட்டு வெளியே வந்தது. வலையோட குறுக்காக இருந்த நூல் வழியாக ஓடி வந்தது.
மணிவண்ணன் அந்த எட்டு கால் பூச்சியைப் பாத்தான். " பாவம் அது ஏமார்ந்து போனது என்று.'' வருத்தப்பட்டான்.
'' என்ன எட்டுகால் பூச்சி, ஏமாந்துவிட்டாயா...? '' அப்படீண்ணு கேட்டான். எட்டுகால் பூச்சி ஒரு நிமிஷம் நின்னைத்து. கண்னை நல்லா உருட்டி உருட்டிப் பார்த்தது.
"மணிவண்ணா நீயுமா என்னை அப்படி கூப்பிடுகிறாய்...? உண்மையில் நீதான் எட்டு கால் பூச்சி. நானல்ல'' என்றது.
" என்னது நான் எட்டுகால் பூச்சியா? ... உனக்குத்தான் எட்டு காலிருக்கு இரண்டு கால் இருக்கிற என்னை பார்த்து " எட்டுகால் பூச்சி '' என்கிறாயே.? '' என்று மணிவண்ணன் கொஞ்சம் கோபமாக கேட்டான்..
" ஆமா ஆமா.. நான் எட்டு கால் பூச்சியல்ல... நீதான் எட்டுகால் பூச்சி. உனக்குச் சந்தேகமாக இருந்தால் உன்னோட கணக்கு வாத்தியாரிடம் போய்க் கேளு '' என்றது எட்டு கால் பூச்சி.
அதை கேட்ட மணிவண்ணன் ஒரு நிமிடம் யோசித்தான். '' எனக்குப் புரிந்தது என்றான்.
உங்களுக்குப் புரிகிறதா? புரியவில்லையா எட்டு கால் சேர்ந்தா எவ்வளவுண்ணு யோசிங்க புரியும். இன்னும் புரியவில்லையா? ஒண்ணோட பாதி அரை. அரையோட பாதி கால்.
எட்டு கால் சேர்ந்தா இரண்டு. நமக்கெல்லாம் இரண்டு கால்கள் இருக்கிறது. அப்ப எட்டுகால் பூச்சி சொல்வதும் சரிதானே.
நல்ல புத்திசாலி பூச்சி. அப்படித்தானே.
|