LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

என்னை அறிந்தால் - இதுவரை... ஒரு லேட்டஸ்ட் அப்டேட்....

வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடித்து வரும் படம் என்னை அறிந்தால்.

இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், திரிஷாவும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், அருண் விஜயும், நடிகர் விவேக்கும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் ஏ.எம்.ரத்னம்.

கடந்த புத்தாண்டு அன்று வெளியான படத்தின் பாடல்களும், ட்ரைலரும் இணையதளங்களில் ஹிட் அடித்தன.

என்னை அறிந்தால் தலைப்பு குறித்து கவுதம் மேனன் கூறும் போது, படத்தில் "நீ என்னை அறிந்தால் இப்படி பேச மாட்டாய், நீ என்னை அறிந்தால் இப்படி செய்ய மாட்டாய்" என்பது போல் அஜித்தின் கதாபாத்திரம் இருக்குமாம். அதனால் தான் இந்த தலைப்பை வைத்துள்ளதாகவும், மேலும் திரையில் பார்க்கும் போது இதற்கான முழு விளக்கமும் கிடைக்கும் என கௌதம் மேனன் பட தலைப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
            
இந்த படத்தை கவுதம் மேனன்தான் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, கவுதம் மேனனையும் சேர்த்து இந்த படத்தில் 4 இயக்குனர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். படத்தை இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்தான் என்றாலும், இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர், திரைக்கதையாசிரியர் ஸ்ரீதர் ராகவனுடன் இணைந்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளனர். தியாகராஜன் குமாரராஜா ஆரண்யகாண்டம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கியவர். இந்த 4 இயக்குனர்களின் உழைப்பில் என்னை அறிந்தால் தயாராகியுள்ளது.  

என்னை அறிந்தால் படத்தின் கதை இணையதளங்களில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாயின. அந்த தகவல்படி, என்னை அறிந்தால் கதை முழுவதும் அஜித்தை சுற்றியே நடக்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக உள்ள அஜித்தின் காதலி திடீரென கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார், எப்படி அஜித் கண்டுபிடித்தார் என்பதுதான் கதையின் கரு.

கதையின் கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பம் நிறைந்ததாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதம் மேனன் படம் பற்றி கூறும்போது, இப்படத்தில் 25 வயது முதல் 40 வயது வரை ஒரு மனிதனின் ட்ராவல் தான் கதை. அஜித் இப்படத்தில் போலிஸா? இல்லை ரவுடியா? என்பதை 40 நிமிடங்களுக்கு உங்களால் கண்டு பிடிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

என்னை அறிந்தால் படம் மொத்தம் 2 மணி, 32 நிமிடங்கள் ஓடும் படமாக உருவாகியிருக்கிறதாம்.

என்னை அறிந்தால் திரைப்படம் நேற்று சென்சார் ஆனது. ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் சென்சார் அதிகாரிகள் படம் பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இம்மாதம் 29-ம் தேதி வெளியாகவிருந்த 'என்னை அறிந்தால்' திரைப்படம், பிப்ரவரி 5-ல் தான் ரிலீஸ் ஆகும் என்று ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படங்களான 'லிங்கா' மற்றும் 'ஐ' ஆகிய படங்கள் இரண்டுமே கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழு அளவில் திருப்தி செய்யாத நிலையில் என்னை அறிந்தால் படமாவது ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தி இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக வெளிவர வேண்டும் என்பதே அனைவரின் அவா...  

Gautham Menon Teach acting to Anushka
by Swathi   on 23 Jan 2015  0 Comments
Tags: என்னை அறிந்தால்   Yennai Arindhaal   என்னை அறிந்தால் ரிலீஸ்   என்னை அறிந்தால் கதை   அஜீத்   Yennai Arindhaal Story     
 தொடர்புடையவை-Related Articles
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் அஜீத் சார்... நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் அஜீத் சார்...
அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!! அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.