LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

என்னவளே!

என்னவளே நீ எங்கிருந்தாய் இதனை நாள்
உன்னை காணாமல் என் வாழ்வின்
உன்னதங்களை தொலைத்தவனாய்
உன்மத்தம் பிடித்தலைந்தபோது வந்தாய்
இன்னமுதாய்!
என் மயக்கம் தெளிவிக்கும் அருமருந்தாய்!
உன் விழிப்பார்வை என்மேல்விழ
எனக்குள் கவித்துவம் சிலிர்த்தெழுந்தது
செந்தமிழ் கவிச்சரம் மாலைகளாய் தொடர்ந்தது
வந்தாய் அமுதாய் வனப்பில் என் பித்தம் தெளிவித்தாய்
சென்றதேன் கண்ணே !
கனவு பெண்ணாய்
கதறுகிறேனே கேட்கிலையா -என்
காதலின் ஆழத்தில் நானே மூழ்கிப்போகிறேன்
மூச்சடைத்து போவதற்குள் என்
முன் வருவாயா? என்னை மீது போவாயா?
உனக்காகவே உன் நினைவுகளோடு
உன் விழிதிறப்பிற்க்காகவே
உன் இமையோரம் காத்திருப்பேன்

கவிஞர் ச ரவிச்சந்திரன்

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.