LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வே.ம. அருச்சுணன்

எதிர்காலம் மண்ணாகலாமா !

 

நடந்து முடிந்த
பதின்மூன்றாவது தேர்தலில்
மூவினத்தின்
அடையாளம் தெரிந்தது.....!
 
மூன்று வந்தேறிகளுக்கும்
நிலைமை தெரியவில்லை
ஆட்டத்தை நிறுத்தவில்லை
வயிற்றுக்காக வாடிய மக்கள்
வந்த இடத்தில்
வகை தெரியாமல் வாழ்கின்றன.....!
 
இங்கே
ஏற்றம் தராது மந்திரத்தை
துணிவாய் முழங்குவதும்
ஒருவரைவொருவர்
தின்று ஏப்பமிட எண்ணுவதும்
வீண் வம்பு
சொன்னால் நம்பு.....!
 
எடுப்பது பிச்சை
பேசுவதோ கொச்சை
பேச்சில் ஒற்றுமை
நடப்பில் வேற்றுமை
அகம்பாவம்
தனக்கே எல்லாமென்ற
குறுகிய உள்ளம்
சிறக்குமா இந்த பெருநிலம்....?
 
கேடு கெட்ட  உள்ளமே
துன்மார்க்கனே
சுனாமி
எந்த உருவில்
வருமென்று தெரியுமா....?
 
முதுகொடிந்த
தமிழனுக்கு இன்னுமா
சோதனைகளும்....வேதனைகளும்......?
 
ஒரு சொல் கேளீர்
சீன சமூகம்
அவர்களோடு கூடிப்பழகு
ஒற்றுமையின் உச்சம் தெரியும்
போராடும் வல்லமை புரியும்
அவர்கள்
மொழி....பண்பாடு
கணமும் மறந்ததில்லை
எழிச்சியைக் கிஞ்சிற்றும்
துறந்ததில்லை.......!
 
யதேச்சயாய் எதையும் நம்புவதில்லை
யாரையும் ஏற்பதும் இல்லை
சுயமாய் சிந்திப்பதும்
செயல்படுவதும்
அவர்களின் வெற்றிக் கவசங்கள்......!
 
உண்மை உணர்வீர்
இனிய வாழ்வு
மாலையுடன் காத்திருக்கிறது ஏற்பீர்.....!
 
இளையோரே முன்வருவீர்
தமிழர் வாழ்வுக்கு வழிகாண்பீர்
அடிமை வாழ்வைத் துறந்தே
சுயமாய் வாழ்வு சிறக்க
சொந்த தொழில் புரிவோம்
அடிமைத்தொழிலை மறந்து
செல்வச் சீமானாகத் திகழ்வோம்......!
 
கையேந்தும் சமூகம் நாமில்லை என்றே
உறக்கக்கூறுவோம்
ஒரே குரலில்......!

நடந்து முடிந்த

பதின்மூன்றாவது தேர்தலில்

மூவினத்தின்

அடையாளம் தெரிந்தது.....!

 

மூன்று வந்தேறிகளுக்கும்

நிலைமை தெரியவில்லை

ஆட்டத்தை நிறுத்தவில்லை

வயிற்றுக்காக வாடிய மக்கள்

வந்த இடத்தில்

வகை தெரியாமல் வாழ்கின்றன.....!

 

இங்கே

ஏற்றம் தராது மந்திரத்தை

துணிவாய் முழங்குவதும்

ஒருவரைவொருவர்

தின்று ஏப்பமிட எண்ணுவதும்

வீண் வம்பு

சொன்னால் நம்பு.....!

 

எடுப்பது பிச்சை

பேசுவதோ கொச்சை

பேச்சில் ஒற்றுமை

நடப்பில் வேற்றுமை

அகம்பாவம்

தனக்கே எல்லாமென்ற

குறுகிய உள்ளம்

சிறக்குமா இந்த பெருநிலம்....?

 

கேடு கெட்ட  உள்ளமே

துன்மார்க்கனே

சுனாமி

எந்த உருவில்

வருமென்று தெரியுமா....?

 

முதுகொடிந்த

தமிழனுக்கு இன்னுமா

சோதனைகளும்....வேதனைகளும்......?

 

ஒரு சொல் கேளீர்

சீன சமூகம்

அவர்களோடு கூடிப்பழகு

ஒற்றுமையின் உச்சம் தெரியும்

போராடும் வல்லமை புரியும்

அவர்கள்

மொழி....பண்பாடு

கணமும் மறந்ததில்லை

எழிச்சியைக் கிஞ்சிற்றும்

துறந்ததில்லை.......!

 

யதேச்சயாய் எதையும் நம்புவதில்லை

யாரையும் ஏற்பதும் இல்லை

சுயமாய் சிந்திப்பதும்

செயல்படுவதும்

அவர்களின் வெற்றிக் கவசங்கள்......!

 

உண்மை உணர்வீர்

இனிய வாழ்வு

மாலையுடன் காத்திருக்கிறது ஏற்பீர்.....!

 

இளையோரே முன்வருவீர்

தமிழர் வாழ்வுக்கு வழிகாண்பீர்

அடிமை வாழ்வைத் துறந்தே

சுயமாய் வாழ்வு சிறக்க

சொந்த தொழில் புரிவோம்

அடிமைத்தொழிலை மறந்து

செல்வச் சீமானாகத் திகழ்வோம்......!

 

கையேந்தும் சமூகம் நாமில்லை என்றே

உறக்கக்கூறுவோம்

ஒரே குரலில்......!

 

by Swathi   on 10 May 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
29-May-2013 02:21:55 vimuna said : Report Abuse
தமிழ் ஆராய்வு பற்றிய விமர்சனம் இன்று அவசியம் என்று கூரும் விமர்சகர்கள் இன் கருத்துகள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.