துப்பாக்கி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், கௌதம் மேனன் இயக்கத்தில் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால், படம் பற்றிய செய்திகள் வெளியான சில நாட்களிலேயே படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த கௌதம் மேனனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
படம் பெரும்பாலும் லண்டனில் நடப்பது மாதிரி கதை எழுதியதால் படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் வரும். இதனை தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என விஜய் நினைத்ததாலேயே இப்படத்திலிருந்து விலகினாராம்.
ஆனால் யோஹன் அத்தியாயம் ஒன்று படம் கைவிடபடவில்லை. கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்து விரைவில் படமாக்க இருக்கிறேன் என்று கௌதம் மேனன் கூறியுள்ளார்.
ஆக, தலையை தொடர்ந்து கவுதம் மேனன், தளபதி படத்தையும் இயக்குவார் எனத் தெரிகிறது.
|