LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கடைசி பெஞ்சில் இருந்து படித்து ஐ.பி.எஸ். ஆனவர்!

கர்நாடகாவைச் சேர்ந்த 2016-ம் ஆண்டு இளம் ஐபிஎஸ் அதிகாரி மிதுன் கடைசி பெஞ்ச் மாணவராகவே இருந்திருக்கிறார்.

இதுகுறித்து மிதுன், லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்லூரியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

''இப்போது என்னைப் பார்க்கும் யாருமே, நான் ஐபிஎஸ் அதிகாரி ஆனதை நம்ப மாட்டார்கள். அப்போது நான் சாதாரண கடைசி பெஞ்ச் பையனாக இருந்தேன். பொறியியல் முடித்துவிட்டு ஐடி துறையில் வேலைக்குச் சேர்ந்தேன்.

ஆனால் வேலையில் எனக்கு நிறைவு கிடைக்கவில்லை. அதனால் வேலையை விட்டு விட நினைத்தேன். அதன்படி 3 ஆண்டுகள் பார்த்து வந்த வேலையை விட்டு விலகினேன்.

என்னுள் இருந்த போலீஸ் கனவு மீண்டும், மீண்டும் வர ஆரம்பித்தது. ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்க்கும போதெல்லாம் நானும் ஒரு அதிகாரியாக வேண்டும் என நினைப்பேன்.

தேர்வுக்குத் தயாராகி நான்கு முறை தோல்வியடைந்தேன். தொடர்ந்து வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு முயன்றேன். முயற்சிக்குப் பிறகு யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 130-வது ரேங்க் பெற்று, ஐ.ஏ.எஸ் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் தேர்ந்தெடுத்தது எனக்கு மிகவும் விருப்பமான காவல்துறையைத் தான்.

உங்களால் இது எப்படி முடிந்தது என எல்லோரும் என்னிடம் கேள்விகள் கேட்டு திணறடித்தனர். ஆனால் போலீஸ் சீருடை எந்த அளவுக்கு என்னை வசீகரித்தது என்பதை இன்று கூட என்னால் சொல்ல முடியவில்லை.

மக்கள் துக்கத்தில் இருக்கும்போது மருத்துவரிடம் செல்வார்கள் அல்லது காவல்துறையிடம் செல்வார்கள். மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறேன்'' என்கிறார் மிதுன்.

கடைசி பெஞ்ச் மாணவனும் முயன்றால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார் மிதுன்.

by Swathi   on 13 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.