LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கம்பர் (Kambar )

யுத்த காண்டம்-இராவணன் தேர் ஏறு படலம்

 

எஞ்சிய சேனையைத் திரட்டுமாறு மகோதரனுக்கு இராவணன் கூறுதல்
பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
'"ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக!" என்று, ஆனை மணி முரசு எற்றுக!' என்றான் 1
சேனைகள் திரளுதலும், இராவணன் பூசனை செய்து, தானம் முதலிய நல்குதலும்
எற்றின முரசினோடும் ஏழ்-இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித் திண் தேரும்,
சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும் தொக்க,
வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று ஆக. 2
ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம் 
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான் 3
இராவணன் போர்க்கோலம் பூணுதல்
அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், சேர்த்தான். 4
வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை
மீள்வு இல் கிம்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி; 5
மறை விரித்தன்ன ஆடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி;
முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; 6
மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து;
முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும் சாத்தி; 7
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும்
புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய் வலம் சார்வுறச் சாத்தி; 8
நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்
ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும்
கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ; 9
கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க;
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின்
சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; 10
உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்
துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர;
புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய;
சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்துஇனம் திகழ; 11
வேலைவாய் வந்து, வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றனர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம் முன் நாளிடைப் பலவாய்
ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; 12
பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு வாய்
வகுத்த வான் கடைக் கடை தொறும் வளை எயிற்று ஈட்டம்,
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க; 13
ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஒக்கத்
தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க;
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; 14
புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித் தலங்கள்
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி,
அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 15
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன் பணித்த
வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு அளவி;
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி; 16
அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை,
நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத் தன்
புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; 17
'வருக, தேர்!' என, வந்தது-வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். 18
ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன்
பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன் காற்றின்
நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின். 19
பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது; பரந்த
நீரில் செல்வது; நெருப்பிடைச் செல்வது; நிமிர்ந்த
போரில் செல்வது; பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது; எவ் உலகினும் செல்வது, ஓர் இமைப்பின். 20
எண் திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்
மண்டிலங்களை மேருவில் குவித்தென வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசுஇனம் குயிற்றியது, அடங்க. 21
முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்
எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பா
வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. 22
கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து
அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத்
திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் செய்கை
உண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் உறையுள். 23
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி,
இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும்
வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கை
நினையின் நீண்டது ஓர் பெருங் கொடை அருங் கடன் நேர்ந்தான் 24
ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்;
வேறு தாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் புலனும்
ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. 25
இராவணனின் சபதம்
'மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்' என்றான் 26
இராவணன் தோள் புடைத்து ஆர்த்து, வில் நாணைத் தெறித்தல்
பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க,
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப,
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். 27
விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப,
பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் பொன்
தசும்பின் நின்று இடை திரிந்திட, மதி தகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். 28
'நணித்து வெஞ் சமம்' என்பது ஓர் உவகையின் நலத்தால்,
திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண் தெறித்தான்;
மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர்
துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். 29
போர்க்களத்தில் இராவணன் தோன்றுதல்
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய,
'பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன்மீது' என்பது ஓர் மெய்யான். 30
தோன்றினான் வந்து-சுரர்களோடு அசுரரே தொடங்கி
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய,
'ஊன்றினான் செரு' என்று உயிர் உமிழ்தர, உதிரம் 
கான்று, நாட்டங்கள் வட அனற்கு இரு மடி கனல. 31
உலகில் தோன்றிய நிலைகுலைவைச் சுக்கிரீவன் முதலியோர் கண்டு, துணுக்கமுற்று எழுதல்
உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும்,
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும்,
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும்,
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். 32
'பீறிற்றாம் அண்டம்!' என்பது ஓர் ஆகுலம் பிறக்க,
வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க,
'மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ?' என எழுந்தார். 33
இராவணன் வருகையை அவர்கள் உணர்தல்
கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும், 
திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண,
அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார். 34
இராவணனது வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்
'எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக்
கொழுந்து முந்தியது உற்றது; கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர்' என்றனன், வீடணன், விரைவான். 35
மிகைப் பாடல்கள்
ஏழ்-இரு நூறு கோடி எனும் படைத் தலைவரோடும்
ஆழியின் வளைந்த சேனை ஐ-இருநூறு வெள்ளம்
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன்,
'வாள் அமர் முடிப்பென் இன்றே' என மணித் தவிசு நீத்தான். 2-1
உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை கேள்வன்
அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு ஆழி
முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா
விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான். 4-1
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை
கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன்,
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக்
கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின், 18-1
ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால்-ஐந்
தும், ஐந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழிய
இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன்
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான். 27-1

எஞ்சிய சேனையைத் திரட்டுமாறு மகோதரனுக்கு இராவணன் கூறுதல்
பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ,மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,'"ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனையாதையும் எழுக!" என்று, ஆனை மணி முரசு எற்றுக!' என்றான் 1
சேனைகள் திரளுதலும், இராவணன் பூசனை செய்து, தானம் முதலிய நல்குதலும்
எற்றின முரசினோடும் ஏழ்-இரு நூறு கோடிகொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித் திண் தேரும்,சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும் தொக்க,வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று ஆக. 2
ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்றபூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம் வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம்ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான் 3
இராவணன் போர்க்கோலம் பூணுதல்
அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர,கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச்செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், சேர்த்தான். 4
வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கைமீள்வு இல் கிம்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி; 5
மறை விரித்தன்ன ஆடுறு மான மாக் கலுழன்சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி;முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; 6
மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரிஇழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து;முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வதழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும் சாத்தி; 7
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் உலகின்இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும்புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி;சரியுடைச் சுடர் சாய் வலம் சார்வுறச் சாத்தி; 8
நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும்கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ; 9
கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க;உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின்சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; 10
உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர;புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய;சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்துஇனம் திகழ; 11
வேலைவாய் வந்து, வெய்யவர் அனைவரும் விடியும்காலை உற்றனர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்மாலை பத்தின்மேல், மதியம் முன் நாளிடைப் பலவாய்ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; 12
பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு வாய்வகுத்த வான் கடைக் கடை தொறும் வளை எயிற்று ஈட்டம்,மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடுஉகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க; 13
ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஒக்கத்தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க;முத்த ஓடைய முரண் திசை முழு மத யானைபத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; 14
புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித் தலங்கள்உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி,அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 15
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்தபாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன் பணித்தவாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு அளவி;தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி; 16
அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை,நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? நின்றஇகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத் தன்புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; 17
'வருக, தேர்!' என, வந்தது-வையமும் வானும்உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும், உச்சிச்சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று எனினும்,நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். 18
ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன்பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர்வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன் காற்றின்நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின். 19
பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது; பரந்தநீரில் செல்வது; நெருப்பிடைச் செல்வது; நிமிர்ந்தபோரில் செல்வது; பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்ஊரில் செல்வது; எவ் உலகினும் செல்வது, ஓர் இமைப்பின். 20
எண் திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும்கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்மண்டிலங்களை மேருவில் குவித்தென வயங்கும்அண்டம் விற்கும் நன் காசுஇனம் குயிற்றியது, அடங்க. 21
முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பாவினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும்சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. 22
கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்துஅண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத்திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் செய்கைஉண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் உறையுள். 23
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி,இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும்வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கைநினையின் நீண்டது ஓர் பெருங் கொடை அருங் கடன் நேர்ந்தான் 24
ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர்தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்;வேறு தாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் புலனும்ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. 25
இராவணனின் சபதம்
'மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறுகொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்;இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்' என்றான் 26
இராவணன் தோள் புடைத்து ஆர்த்து, வில் நாணைத் தெறித்தல்
பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் தோள்அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க,விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப,உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். 27
விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப,பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் பொன்தசும்பின் நின்று இடை திரிந்திட, மதி தகை அமிழ்தின்அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். 28
'நணித்து வெஞ் சமம்' என்பது ஓர் உவகையின் நலத்தால்,திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண் தெறித்தான்;மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர்துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். 29
போர்க்களத்தில் இராவணன் தோன்றுதல்
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க,இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய,'பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்விரித்து எழுந்தனன், அனந்தன்மீது' என்பது ஓர் மெய்யான். 30
தோன்றினான் வந்து-சுரர்களோடு அசுரரே தொடங்கிமூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய,'ஊன்றினான் செரு' என்று உயிர் உமிழ்தர, உதிரம் கான்று, நாட்டங்கள் வட அனற்கு இரு மடி கனல. 31
உலகில் தோன்றிய நிலைகுலைவைச் சுக்கிரீவன் முதலியோர் கண்டு, துணுக்கமுற்று எழுதல்
உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும்,மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும்,அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும்,தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். 32
'பீறிற்றாம் அண்டம்!' என்பது ஓர் ஆகுலம் பிறக்க,வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க,'மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ?' என எழுந்தார். 33
இராவணன் வருகையை அவர்கள் உணர்தல்
கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும், திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண,அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும்கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார். 34
இராவணனது வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்
'எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக்கொழுந்து முந்தியது உற்றது; கொற்றவ! குலுங்குற்றுஅழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி,விழுந்து சிந்தினர்' என்றனன், வீடணன், விரைவான். 35
மிகைப் பாடல்கள்
ஏழ்-இரு நூறு கோடி எனும் படைத் தலைவரோடும்ஆழியின் வளைந்த சேனை ஐ-இருநூறு வெள்ளம்ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன்,'வாள் அமர் முடிப்பென் இன்றே' என மணித் தவிசு நீத்தான். 2-1
உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை கேள்வன்அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு ஆழிமுரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியாவிரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான். 4-1
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமைகண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன்,பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக்கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின், 18-1
ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால்-ஐந்தும், ஐந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழியஇம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன்வெம்மை ஆடு அமர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான். 27-1

by Swathi   on 23 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.