LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

ஆற்றின் கரையோரம்

ஆற்றின் கரையோரம்

 

கரையோரம் நின்று

ஆற்றின் அழகை

இரசித்து

கொண்டிருக்கிறேன்

 

என் ஊரின்

அரிச்சுவடி இதிலிருந்துதான்

ஆரம்பித்திருக்கிறது

 

ஆயிரமோ நூறோ

ஆண்டுகள் கடந்தும்

தன் செருக்கு

கொண்டதில்லை

 

அவசரமாய்

செல்லாமல்

நிதானமாய்

நகர்ந்தாலும்

 

தொப்புள் சுழிகளை

காட்டி தான்

சில நேரங்களில்

ஆபத்தானவள்

என்று சொல்வது

போல

 

 

இடை வளைத்து

பச்சை கரை

புடவை அணிந்து

நாணி செல்லும்

அழகு

 

இடையிடையே

வெள்ளை சிரிப்பை

சிந்தி..! பாறை

குன்றுகளில்

காதல் மொழி

பேசி

 

கரையின் ஓரம்

மக்களின் குளியல்

துணிகளின் அலசல்

 

அத்தனை அழுக்கையும்

தன் மார்பினில்

ஏந்தி

 

ஊரின் வளமை

இவளின் கையில்

 

உணர்த்தும்

பசுமை பசுமை

எங்கும் பசுமை

River shore
by Dhamotharan.S   on 30 May 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கவி துளிகள் கவி துளிகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.