LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா

சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா


அன்புடையீர், வணக்கம். சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அழைப்பினை இப்பதிவில் இணைத்துள்ளோம். வாய்ப்புடையோர் வருகைபுரிந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந்த நிகழ்ச்சியை வயல்வெளிப் பதிப்பகமும், வலைத்தமிழ் இசைக்கல்விக் கழகமும் ஒருங்கிணைத்துள்ளன.

நாள்: 11.03.2023 காரி(சனி)க் கிழமை நேரம்: மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை

இடம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்ற அரங்கு
(AUTEAA / AUAC), தூய தாமசு மலை, சென்னை
( No 07, PCM Colony Street, St. Thomas Mount, Chennai -600 016 )


தலைமை: முனைவர் வி.ஜி. சந்தோஷம்
தலைவர், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்

நூல் வெளியீடு, சிறப்புரை: முனைவர் ம. இராசேந்திரன்,
மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்


முதல்படி பெறுதல்: வழக்கறிஞர் ப. இராம முனுசாமி, புதுச்சேரி


அருளாசியுரை:
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்
இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம்

வரவேற்புரை: பொறியாளர் சிங்கை இளங்கோ

பங்கேற்போர்:
இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன் / முனைவர் இ. கே. தி. சிவகுமார் / பேராசிரியர் உலகநாயகி பழநி / முனைவர் வ. மு. சே. ஆண்டவர் / அ.அறிவன் / பொறியாளர் தமிழ் இயலன் / / வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி / மு. கலைவாணன்

ஏற்புரை: முனைவர் மு. இளங்கோவன்

அனைவரும் வருக!

அழைப்பின் மகிழ்வில்
வயல்வெளிப் பதிப்பகம்,
வலைத்தமிழ் தமிழிசைக் கல்விக்கழகம் 
தொடர்புக்கு: 9442029053

 

நூல் அறிமுகம்:

கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழை நடுவணாகக் கொண்டு இயங்கிய இசைத்தமிழ்க் கலைஞர்களைப் பற்றி அறியும் ஆர்வத்தில் தேடியபொழுது சற்றொப்ப 5764 பேர் குறித்த பட்டியல் ஒன்றை உருவாக்க முடிந்தது. என்னொருவனிடம் இப்பட்டியல் இருப்பதைவிட, உலகத் தமிழர்களின் கையினுக்குக் கிடைத்தால் பட்டியலில் விடுபட்ட இசைத்தமிழ்க் கலைஞர்களின் பெயரும் இப்பட்டியலில் இணையும் என்பதால் இசைத்தமிழ்க் கலைஞர்கள் – நோக்கீட்டு நூல் என்னும் பெயரில் வெளியிட உள்ளோம்.

கடந்த ஈராண்டுகளாக இந்த நூலினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். 304 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை 350 உருவா ஆகும். ஒற்றை வரியில் இசைத்தமிழ்க் கலைஞர்களின் சிறப்புகளை இந்த நூல் அடையாளப்படுத்துகின்றது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இசைதமிழ்க் கலைஞர்களின் பணிகளை இந்த நூலின் வழியாக அறிய இயலும். வாய்ப்பாட்டு அறிஞர்கள், கருவியிசை அறிஞர்கள், ஓதுவார்கள், இசையாய்வு அறிஞர்கள், இசைத்தமிழ்ப் புரவலர்கள் குறித்த விவரங்களும் இந்த நூலில் உள்ளன.

by Swathi   on 09 Mar 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.