LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

இன்றைய எழுத்துத்தமிழில் செயல்படும் ஒரு ''புதிய'' இலக்கண விதி ...

இன்றைய எழுத்துத்தமிழுக்கான தரவகத்தை ஆய்வுசெய்யும்போது, நானும் எனது நண்பரும் கணினிப் பொறியாளருமான திரு. சரவணன் அவர்களும் காணுகின்ற ஒரு ''புதிய'' இலக்கண விதியை ஒரு கருதுகோளாக இங்கு முன்வைக்கிறோம்.
 
இதுபற்றி அமெரிக்காவில் பணியாற்றும் வேதிப்பொறியியலாளர் திரு. இராமசாமி செல்வராசு அவர்களும் தனது பதிவு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்கள். பின்னர் இக்கருதுகோளை நேற்று எனது முகநூல் பக்கத்தில் தமிழ் ஆய்வாளர்களின் கருத்துக்களுக்காக முன்வைத்திருந்தேன். அமெரிக்காவில் கூகுளில் பணியாற்றும் கணினியியல் அறிஞர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியம், சிதம்பரத்தில் பணியாற்றும் மருத்துவர் ஐயா திரு. இரவீந்திரன் வெங்கடாச்சலம், மொழியியல் பேராசிரியர் செம்மொழி கே. இராமசாமி, பேராசிரியர் தமிழ் வளனறிவு, நண்பர் திரு. அரி அரவேலன் யரலவழள, மொழியியல் பேராசிரியர் திரு. ரவிசங்கர் கங்காதரன் ஆகியோர் உரையாடலில் பங்கேற்றனர். நண்பர் திரு. இராமசாமி துரைப்பாண்டி, பேரா. அருள்மொழி உட்பட நண்பர்கள் பலர் எனது பதிவை விரும்பியிருந்தனர். (பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் , இனிய நண்பர் திரு. முத்தையா சுப்பிரமணியம் உட்பட மேலும் தமிழ் அறிஞர்கள் பலரது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.)
 
அதனடிப்படையில் கீழ்க்கண்ட இலக்கண விதியை ஒரு ''கருதுகோளாக (hypothesis) '' ஆகமட்டுமே இங்கு முன்வைக்கிறோம். இந்த விதிக்கு மாறான எடுத்துக்காட்டுக்கள் நமக்குக் கிடைத்தால், பின்னர் இதை மாற்றிக்கொள்ளலாம்.
------------------------------------------------------------------------
வன்தொடர்க்குற்றியலுகரத்திற்குப்பின் ஒற்று மிகுதல் என்பது மூன்று மொழிச்சூழல்களிலும் நிகழ்கிறது ; விலக்கின்றி நிகழ்கிறது.
(1) செய்து வாய்பாட்டு வினையெச்சச் சொல்லிற்குப்பின்னர் வருமொழியில் வல்லினம் வரும்போது - 'படித்துப்பார்த்தான்''- நிகழ்கிறது.
(2) பெயர் + வினை அமைப்பு வரும்போதும் - 'அலுப்பு + தட்டு = அலுப்புத்தட்டு' - நிகழ்கிறது.
(3) வினை + பெயர் அமைப்பு வரும்போதும் - 'ஆட்டு + கல் = ஆட்டுக்கல் ' - நிகழ்கிறது.
எனவே, இதை விதிவிலக்காகக் கொள்வதற்குப்பதிலாக, ஒரு பொது விதியாக - ஒலியியல், ஒலியனியல், மொழியசை ஆகியவற்றின் அடிப்படையில் - கொள்ளலாம் அல்லவா? இந்த விதிக்கும் பிற விதிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும்போது, இந்த விதியே முதன்மைபெறுகிறது என்றும் கொள்ளலாம் அல்லவா? இதுவே எங்களது தற்போதைய கருதுகோள்.
 
-தெய்வ சுந்தரம் நயினார்
 
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.