LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

காராமணி வடை

தேவையானவை :  

1. வெள்ளைக் காராமணி - 1 கப்

2. வரமிளகாய் - 2

3. சோம்பு - 1 டீஸ்பூன்
 
4. பச்சை மிளகாய் - 1 (பொடித்தது)

5. இஞ்சி - 1 இன்ச் (பொடித்தது)

6. பெரிய வெங்காயம் - 1 (பொடித்தது)

7. கறிவேப்பிலை - சிறிது

8. துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

9. பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை

10. உப்பு - தேவையான அளவு

11. எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப

செய்முறை :

1. முதலில் ஒரு பாத்திரத்தில் காராமணியை போட்டு நீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன், வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின்பு அதனை ஒரு கப்பில் போட்டு, அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

3. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து வாழை இலையில் வைத்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காராமணி வடை ரெடி!!!

by Swathi   on 19 Jan 2016  0 Comments
Tags: Karamani Vadai   Vadai                 
 தொடர்புடையவை-Related Articles
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
காராமணி வடை காராமணி வடை
கேழ்வரகுத் தட்டுவடை கேழ்வரகுத் தட்டுவடை
ஆயா வட சுட்ட கதை - ஒரு முக்கோண ஏமாற்று கதையாம் !! ஆயா வட சுட்ட கதை - ஒரு முக்கோண ஏமாற்று கதையாம் !!
ஆயா வடை சுட்ட கதை விரைவில் படமாகிறது !! ஆயா வடை சுட்ட கதை விரைவில் படமாகிறது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.