LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் ஆர்வலர்கள்

தமிழ் ஆய்வுலகில் பிற துறை அறிஞர் பெருமக்கள் ....

தமிழ்த்துறையில் பட்டம் பெற்று, அத்துறையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதில் வியப்பு இல்லை! ஆனால் வேதியியல், பொறியியல், கணினியியல் போன்ற பிற துறைகளில்... அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்பட்டங்கள் பெற்று ... மிகப் பெரிய நிறுவனங்களில்... பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்துகொண்டு.... வியக்கத்தக்கவகையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்களில் ஆய்வுகளை மிக ... மிக மிக... ஆழமாக மேற்கொண்டுவருபவர்களின் தமிழ் உணர்வும், தமிழ் ஆய்வும் வியக்க வைக்கின்றன. அவர்கள் முகநூல் பக்கங்களில் முன்வைக்கிற கருத்தாடல்களைப் பார்க்கும்போது, எவ்வளவோ நான் பின்தங்கியுள்ளேன் என்ற ஒரு உணர்வு தோன்றுகிறது.
 
வேர்ச்சொல் ஆய்வில் பாவாணர், பெருஞ்சித்திரனார், அருளி என்ற வரிசையில் இராம கி ஐயா அவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இவர் துறை வேதிப் பொறியியல்! தமிழ் இலக்கணம், தமிழ்க் கலைச்சொல் ஆக்கம் என்று பல முனைகளில் தமிழ்ப்பணி புரிந்துவரும் செல்வா என்று அன்பாக அழைக்கப்படும் பேரா. செ.இரா. செல்வக்குமார் மின்னணு- மின்னியல் துறையில் கனாடாவில் வாட்டர்லூ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். மதிப்பிற்குரிய ஜெயபாண்டியன் கோட்டாளம் , மணி மணிவண்ணன், நாக இளங்கோவன், இராமசாமி செல்வராசு, வேல்முருகன் சுப்பிரமணியன், சுந்தர் இலட்சுமணன்.... பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவர்கள் அனைவரும் தற்போது அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் என்று அயல்நாடுகளில் தங்கள் துறை நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
 
பண்டைத் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் , இன்றைய கணினிமொழியியல் என்று பல தளங்களில் தமிழ்மொழிக்கான குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுவருகிறார்கள். இவர்களுடைய கருத்தாடல்களில் பங்கேற்க வேண்டுமென்றால்... நமக்கு மிக ஆழமான தமிழ் அறிவு தேவைப்படுகிறது என்பதைப் பல நேரங்களில் நான் உணர்ந்துள்ளேன். ''இவர்கள் என்ன, தமிழில் பட்டம் பெற்றவர்களா, தமிழ்த்துறையைச் சேர்ந்தவர்களா '' என்று நினைத்துவிடக்கூடாது ... அது ஆபத்து!இவர்களைப்பற்றித் தனித்தனியே விரிவாக முகநூலில் பதிவு செய்ய விரும்புகிறேன். விரைவில் அப்பணியை நிறைவேற்றுவேன்.
 
மேலே நான் குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் மட்டுமல்ல, என்னுடைய பட்டியலில் பிறதுறைகளைச்சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் மேலும் பலர் ... இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் இருக்கின்றனர். அவர்களைப்ற்றிய விவரங்களைத் திரட்டிவருகிறேன்.
 
தமிழ்ப்பணி என்பது தமிழ்ப் புலவர்கள், தமிழ் இலக்கண ஆய்வாளர்கள், தமிழாசிரியர்கள் என்ற நிலை எல்லாம் இன்று மாறிவிட்டது. தமிழ்மொழியின் சிறப்பும், கட்டமைப்பும் மேற்குறிப்பிட்ட பிறதுறை அறிஞர்களை மிகவும் கவர்ந்துவிட்டன. அவர்கள் பிற துறைகளில் பெற்ற ஆய்வுமுறைகளையெல்லாம் ... தமிழுக்கு இன்று செயல்படுத்தி, வியக்கத்தக்கப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழாய்வுக்கு மிகச் சிறப்பான நிகழ்காலம் தற்போது என்பதில் மிக்க மகிழ்வடைகிறேன். இவர்கள் அனைவருக்கும் தமிழ் ஆய்வுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. இவர்களுக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
 
-தெய்வ சுந்தரம் நயினார்
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.