LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

ஆங்கிலத்தில் திருக்குறள்: ஜப்பானிய அமெரிக்கக் கவிஞரின் மொழிபெயர்ப்பு

திருக்­கு­றளை ஆங்­கி­லத்­தில் மொழி­பெ­யர்த்­துள்ளார் எழுத்­தா­ள­ரும் கவி­ஞ­ரும் படைப்­பா­ள­ரு­மான தாமஸ் ஹிட்­டோஷி புருக்ஸ்மா
அமெ­ரிக்­கா­வில் பிறந்து வளர்ந்­த­ ஜப்பானியரான அவர், ஆங்­கி­லத்­தில் விளக்க உரையுடன் கூடிய ‘த குறள்: திரு­வள்­ளு­வர்ஸ் திருக்­கு­றள்’ எனும் நூலை இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் வெளி­யிட்டார்.
 
சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வில் நான்கு நேரடி நிகழ்­ச்சி­களில் கலந்­து­கொண்டு, ஔவை­யார், திரு­வள்­ளு­வர் ஆகியோர் குறித்தும் அவர் கலந்­து­ரை­யா­டி­னார். ஆங்­கி­லம், ஸ்பானிய மொழிகளுடன் இரு­பது ஆண்­டு­களுக்கு முன் மது­ரை­யில் சில ஆண்­டு­கள் வாழ்ந்தபோது தமிழ்­மொ­ழி­யையும் அவர் கற்­றுக்­கொண்டார். பேச்சுத் தமி­ழோடு எழுத்துத் தமிழையும் பயின்ற தாமஸ், தமிழ் இலக்­கி­யங்களிலும் ஆர்வம் காட்டினார். அவ­ரது தமிழ்­மொழி கற்­றல் பய­ணத்­தில் உறு­து­ணை­யாக இருந்­தார் மது­ரை­யைச் சேர்ந்த முனை­வர் கு. வே ராம­கோடி.
 
திருக்­கு­ற­ளின் ஆங்­கில மொழி­பெ­யர்ப்­பு­கள் திருக்­கு­ற­ளைப் போன்ற ஒரு கவி­தா­னு­ப­வத்­தைத் தர­வில்­லை என்ற குறையை உணர்ந்ததாகக் கூறும் தாமஸ், ஏறத்­தாழ பதி­னைந்து ஆண்­டு­களுக்கு முன்­னரே திருக்­கு­றளை ஆங்கிலத்தில் மொழி­பெ­யர்க்கத் திட்டமிட்டதாகக் கூறினார். “திருக்­கு­ற­ளில் என்னை மிக வும் ஈர்த்­தது, திரு­வள்­ளு­வரின் வார்த்­தை­ விளையாட்டுதான். அவரது கவி­ந­ய­மும் சொல் தெரி­வு­களும் சந்த ந­ய­மும் வியக்­கத்­தக்­கவை. அதே சுவையை இன்­றைய நவீன ஆங்­கி­லத்­தில் கொண்டுவரு­வ­தற்கு முயற்சி செய்­துள்­ளேன்,” என்­றார் அவர். மண்­ணைப் போற்­றுதல், விருந்­தோம்புதல் போன்ற தமி­ழர் பண்­பாட்டுக்கூறு­க­ளைப் புரிந்துகொள்ள தாமசுக்கு திருக்­கு­றள் ஒரு வாய்ப்பாக அமைந்­தது. தத்­துவ அடிப்­ப­டை­யில் திருக்­கு­றளை ஆராய்ந்த அவ­ருக்கு, அதன் கருத்துச் செறிவு வியப்­பூட்­டி­யது. மணக்­கு­ட­வர், பரி­மே­ல­ழ­கர் ஆகி­யோ­ரின் உரை­கள் அவ­ரது புரி­த­லுக்குக் கைகொ­டுத்­தன.
“விருந்­தோம்­பல் அதி­கா­ரம் என் மனத்­துக்கு நெருக்­க­மா­னது. விருந்­தி­னர்­களை நடத்­தும் முறையை மட்­டு­மன்றி, அவர்­க­ளி­டம் பேசு­வது எப்­படி என்­ப­தை­யெல்­லாம் இந்த அதி­கா­ரம் எடுத்­து­ரைக்­கிறது,” என்­றார் தாமஸ்.
 
நீதி­நூ­லான திருக்­கு­றளை அணு­கு­வ­தற்­குப் பலர் தயங்­கக்­கூ­டும் என்று கூறிய அவர், திருக்­கு­ற­ளின் கருத்­து­கள் அனைத்­தும் சமூ­கத்­தின் பல்­வேறு பிரி­வி­ன­ருக்­கும் எல்லாக் கா­லத்­துக்­கும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கின்­றது எனக் குறிப்­பிட்­டார்.
 
“நாம் எவ்­வாறு திருக்­கு­ற­ளின் கருத்­து­களை வாழ்­வி­ய­லுக்கு பொருத்­திப் பார்க்­கி­றோம் என்­பதே முக்­கி­யம்,” என்­ற தாமஸ், ஔவையார் பாடல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
 
ஆண்­டா­ளின் திருப்­பா­வை­ நூலை ஆங்­கி­லத்­தில் மொழி­பெயர்த்­து அடுத்த ஆண்டு இவர் வெளி­யி­ட­ உள்­ளார்.
 
செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி
நன்றி: தமிழ் முரசு சிங்கப்பூர்
 
 
 
 
 
 
by Swathi   on 28 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.