|
||||||||
மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன் சாமிவேலு அவர்களுக்குப் புகழ்வணக்கம்! |
||||||||
மலேசியத் திருநாட்டில் தமிழர்களின் அடையாளமாக விளங்கிய துன் ச. சாமிவேலு அவர்கள் இன்று (15.09.2022) இல் இயற்கை எய்திய செய்தி உலகத் தமிழர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மலேசியத் தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசிய மக்களின் புதிய மலேசிய வரலாற்றில் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன் சாமிவேலு அவர்கள். மலேசியா அரசு அவரது அளப்பரிய மேம்பாட்டுப் பணிகளைப் புகழ்ந்து அவருக்கு பல்வேறு பட்டங்களை வழங்கியுள்ளது. இன்று நாம் காணும் மலேசிய நெடுஞ்சாலை துன் சாமிவேலு அவர்கள் பெயர் சொல்லிக் கொண்டே இருக்கும் என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. 80ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தோட்டப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்க இவரின் துண்டுகோலும் செயல்களும் உறுதுணையாக இருந்தன என்பதில் எனக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. மலேசிய இந்திய காங்கிரஸின் நிறுவனத் தலைவராக 31 ஆண்டுகள் பதவி வகித்தவரும் மலேசிய முன்னாள் அமைச்சருமான டத்தோ எஸ். சாமிவேலு (வயது 86) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மலேசிய இந்தியர்களின்- தமிழர்களின் முகமாக திகழ்ந்தவர் டத்தோ எஸ்.சாமிவேலு. 1936-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி பிறந்தவர். மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியை 1979-ம் ஆண்டு தொடங்கினார் டத்தோ சாமிவேலு. 31 ஆண்டுகள், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் பதவி வகித்தார் டத்தோ சாமிவேலு. பிரதமர் மோடி இரங்கல் செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி: மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான எஸ்.சாமிவேலு அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்
டத்தோ விருது 1982-இல் கொரியக் குடியரசு சாமிவேலுவுக்கு கொரிய அரச சேவை விருதை வழங்கியது. 1982-இல் இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய உயரிய அரசு சேவை விருதை வழங்கிக் கௌரவம் செய்துள்ளது. 1987-இல் உலக மாமனிதர் எனும் கௌரவ விருதை அமெரிக்க அரசாங்கம் வழங்கியது. டாக்டர் பட்டம் 1989 ஆம் ஆண்டு பேராக் சுல்தான் தன் 61ஆம் பிறந்த நாளில் சாமிவேலுவிற்கு ‘டத்தோ ஸ்ரீ’ எனும் விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார். அதே ஆண்டு இந்தியாவின் புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது சாமிவேலுவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது. 2001 ஆம் ஆண்டில் தமிழகத் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி, தமிழக முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பு செய்தார். துன் விருது தமிழ்ப்பற்றும், கொடையுள்ளமும் வாய்த்த துன். ச. சாமிவேலு ஐயாவின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்த இயக்கத் தோழர்கள், மலேசியத் தமிழர்கள் யாவருக்கும் வலைத்தமிழ் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
|
||||||||
by Swathi on 15 Sep 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|