LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

ராகி உப்புமா

தேவையானவை :

1. ராகி மாவு - 1 கப்

2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

4. கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்

5. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

6. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

7. பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

8. கடுகு - 1/2 டீஸ்பூன்

9. சீரகம் - 1/2 டீஸ்பூன்

10. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

11. கறிவேப்பிலை - சிறிது

12. கொத்தமல்லி - சிறிது

13. உப்பு - தேவையான அளவு

14. தண்ணீர் - 2 கப்

15. எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ராகி மாவை போட்டு நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் சீரகத்தை போட்டு தாளித்து, பின் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

2. பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

3. பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மெதுவாக ராகி மாவை சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு, மூடி வைத்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதனை இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கி வைத்த கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால் ராகி உப்புமா ரெடி!!!

by Swathi   on 29 Jan 2016  0 Comments
Tags: ராகி உப்புமா   கேழ்வரகு உப்புமா   Ragi Upma   Kelvaragu Upma           
 தொடர்புடையவை-Related Articles
ராகி உப்புமா ராகி உப்புமா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.