இராமநாதபுரம் மாவட்டம் கிடைகார மக்களின் தாய்
நிலம். இங்கிருந்து எத்தனையோ கிடைகார மக்கள் தங்கள் ஆடுகளையும் மாடுகளையும் கிடை போடுவதெற்கென்று தமிழகத்தின் பல பகுதிக்கும் ஓட்டிச்சென்று வந்துள்ளார்கள். அவர்களைப் பற்றிய இந்நூல் முதுகுளத்தூரில் வெளியீடு காண்கிறது. கிடைத்தொழில் என்பது குறிப்பிட்ட ஒரு சமூகம் சார்ந்த தொழிலாகத் தெரிந்தாலும் இத்தொழில் தொடர்ந்து நடைபெற தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களின் எதார்த்தமான நட்பும் வாழ்வியலும் மறைமுகமாகப் பன்னெடுங்காலமாக உதவியுள்ளது. அவர்களின் வாழ்வியலைப் பேசும் இந்நூல் வெளியீட்டிற்கு யாவரையும் அன்போடு அழைக்கிறேன் .