நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-40
நாள்: 24/11/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 06:30-07:45 மணி
நூல்: வள்ளுவரின் கவின்மிகு காமத்துப்பால்
ஆசிரியர்: பேரா முனைவர் ச. கணபதிராமன்
நூல் குறிப்பு:
திருக்குறளின் காமத்துப்பால் குறித்து ஆசிரியர் பேராசிரியர் முனைவர் ச. கணபதிராமன் பல்வேறு தலைப்புகளில் தனது கருத்துக்களை வடித்துள்ளார். வள்ளுவர் இயற்றிய வாழ்வியல் இன்பத்தை வாசகர்களுக்கு சுவைபட விளக்குகிறது இந்நூல். இதன் தனிச்சிறப்பு, பிற்சேர்க்கையாக உள்ள திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய நூலாசிரியரது ஆய்வின் இணைப்பாகும். நூலாசிரியர் முனைவர் ச. கணபதிராமன் அவர்கள் தென்காசி திருவள்ளுவர் மேனாள் தலைவர். தமிழக அரசால் "சிறந்த தமிழ்ப் பேராசிரியர்" (1998) விருது பெற்றவர்.
நூல் அறிமுகம் செய்வார்: ந பழனிதீபன்
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகத் தொண்டாற்றும் பழனிதீபன் அவர்கள், தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவர். கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுபவர். இவரது திருக்குறள் குறித்த உரை விரைவில் வெளிவர இருக்கிறது.
ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை
இதே நேரம், இதே இணைப்பு.
Join Zoom Meeting
Zoom ID: 988 6476 9563
Passcode: 1330