மலேசியத் தமிழ்நெறிக் கழகம்
DATE | TIMINGS |
---|---|
23 Dec 2017 | 04.00 PM to 10.00 PM |
பெருந்தமிழ்ச் சான்ற பெரியீர்!
வணக்கம் வாழ்க.
மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் வரலாற்று விழாவாக நடைபெறும் தமிழ்நெறி மாணவர் பண்பாளர் விழா இவ்வாண்டு வரும் 23-24/12/2017 ஆகிய நாள்களில் மலேசியா நெகிரி செம்பிலான். மாநிலத்தில் பகாவ் செயிண் ஏடன் தொடக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெறவுள்ளது. சீரிய தமிழிய இளையோரை உருவாக்கி வெளிப்படுத்தும் நோக்கில் நிகழ்த்தப்படும் இவ்விழா இவ்வாண்டு 19 ஆவது ஆண்டாக நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து திரு மகிழ்நன் (ஆனந்தன் ) அவர்களும் தமிழகத்திலிருந்து பேராசிரியர் இளங்கோவன் அவர்களும், மலேசியாவில் டத்தோசிறி ஆனந்தன் அவர்களும் சிறப்பு வருகையாளராக கலந்து கொள்ளவிருக்கின்றனர் . இவ்விழாவில் கலந்து சிறப்பு செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் விழைகின்றோம். நாடு தழுவிய நிலையில் மாணவர்களும் இளையோர்களும் , பெரியவர்களும் பங்குகொள்ளும் இவ்விழா சிறப்புற தங்களின் அனைத்து வகையான உதவிகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி வணக்கம்
இவ்வண்ணம்
மலேசியத் தமிழ்நெறிக் கழகம்