திருக்குறள் (வள்ளுவரோடு ஒரு திரைப்பயணம்) திரைப்படத் துவக்க விழா இலக்கியம் / திருக்குறள் திருக்குறள் செய்திகள் (Thirukkural News ) Thirukkural-Valluvarodu-oru-movie-movie-launch
வரும் திருவள்ளுவர் நாள் 2024 அன்று (16/01/2024)
மாலை 6 மணிக்கு சென்னை , மியூசிக் அகாதமியில்
திருக்குறள் (வள்ளுவரோடு ஒரு திரைப்பயணம்) திரைப்படத் துவக்க விழா
நூலை வெளியிட்டு சிறப்புரையாற்ற செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் , மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் வருகைதருகிறார்கள். நூலைபெற்று சிறப்பிக்க டாக்டர்.வி.ஜி. சந்தோசம் உள்ளிட்ட பல ஆளுமைகள் வருகைதருகிறார்கள்.
இப்படத்தை இயக்குபவர் அன்பிற்குரிய இயக்குநர் , காமராஜ் படம் எடுத்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் ஏ.ஜெ.பாபகிருஷ்ணன் அவர்கள்.
திருக்குறள் (வள்ளுவரோடு ஒரு திரைப்பயணம்) திரைப்படத்தினை தொடங்கிவைக்க வி.ஐ.டி. வேந்தர் திரு.கோ.விசுவநாதன் ,வி.ஜி.பி.சந்தோசம் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர்.
திருக்குறளை ஒட்டிய பல கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது.
பல பெரும் ஆளுமைகளும் , திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ள இவ்விழாவில் வலைத்தமிழ் -வள்ளுவர் குரல் குடும்பம் இணைந்து முன்னெடுத்த "உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின்" இறுதி அறிக்கையாக 2018ல் தொடங்கப்பட்ட திட்டத்தின் முழு தொகுப்பு விவரமும் "Thirukkural Translations in World Languages" என்ற நூலாக வெளியிடப்படுகிறது.
அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வரும் திருவள்ளுவர் நாள் 2024 அன்று (16/01/2024)
மாலை 6 மணிக்கு சென்னை , மியூசிக் அகாதமியில்
திருக்குறள் (வள்ளுவரோடு ஒரு திரைப்பயணம்) திரைப்படத் துவக்க விழா
இப்படத்தை இயக்குபவர் அன்பிற்குரிய இயக்குநர் , காமராஜ் படம் எடுத்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் ஏ.ஜெ.பாபகிருஷ்ணன் அவர்கள். திருக்குறள் (வள்ளுவரோடு ஒரு திரைப்பயணம்) திரைப்படத்தினை தொடங்கிவைக்க வி.ஐ.டி. வேந்தர் திரு.கோ.விசுவநாதன் ,வி.ஜி.பி.சந்தோசம் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர்.
திருக்குறளை ஒட்டிய பல கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது.
பல பெரும் ஆளுமைகளும் , திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ள இவ்விழாவில் வலைத்தமிழ் -வள்ளுவர் குரல் குடும்பம் இணைந்து முன்னெடுத்த "உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின்" இறுதி அறிக்கையாக 2018ல் தொடங்கப்பட்ட திட்டத்தின் முழு தொகுப்பு விவரமும் "Thirukkural Translations in World Languages" என்ற நூலாக வெளியிடப்படுகிறது.
நூலை வெளியிட்டு சிறப்புரையாற்ற செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் , மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் வருகைதருகிறார்கள். நூலைபெற்று சிறப்பிக்க டாக்டர்.வி.ஜி. சந்தோசம் உள்ளிட்ட பல ஆளுமைகள் வருகைதருகிறார்கள்.
அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.