சிறப்பு விருந்தினர்: திருமதி சரண்யா,
ஊ.ஒ.தொடக்க பள்ளி,
ஆண்டித்தாங்கல், உத்திரமேரூர் ஒன்றியம்,
காஞ்சிபுரம்.
நெறியாள்கை: திருமதி இரா. தேன்மொழி,
பட்டதாரி தலைமையாசிரியர், ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி, பையூர், திருவண்ணாமலை மாவட்டம்.
அறிமுகயுரை: திரு.ரவிசொக்கலிங்கம், நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) அறிவியல் மன்றம் ஏற்படுத்தி சோதனைகளை செய்து காட்டியும் மாணவர்களை செய்ய வைத்தும் அறிவியல் சிந்தனைகளை ஊக்கப்படுத்தியது.
2) CCRT மூலம் பொம்மைகள் செய்ய பயிற்சி பெற்று மாணவர்களையும் செய்ய வைத்து பொம்லாட்டம் மூலம் கற்றலை மேம்படுத்தியது.
3) மாநில அளவில் ஆசிரியர் கையேடு உருவாக்க பணிகளில் பங்கேற்றது. மாணவர்கள் ஆர்வத்தோடு கற்றலில் ஈடுபட கணினி வகுப்பறையை ஏற்படுத்தியது.
4) கொரோன ஊரடங்கு காலத்திலும் மாணவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்து காஞ்சி டிஜிட்டல் டீம் உடன் இணைந்து பயிற்சி அளித்தது.
5) மாணவர்களின் தனித்திறமைகளை வெளிகொணரும் வகையில் பல்வேறு போட்டியில் மாவட்ட அளவில் பங்கேற்று பரிசுகள் பெற செய்தது.