தாமஸ் கோப்பை 2022,கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுப்பந்து அணி
தாய்லாந்து, பாங்காக் நகரில் உலக நாடுகளுக்கு இடையேயான தாமஸ் கோப்பைக்கான இறகுப்பந்தாட்டம் நடந்தது. 14 வருடங்களாக தொடர் சாம்பியனாக இருக்கும் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி தாமஸ் கோப்பையோடு, தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளது இந்திய ஆடவர் அணி. இது இந்தியா முதன்முதலாக தாமஸ் கோப்பையினை சொந்தமாக்கும் தருணமாகும். 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை ஆட்டத்தில் தற்போதே இந்தியாவிற்கு முதன் முறை தாமஸ் கோப்பை கிடைத்துள்ளது.
எனவே இந்திய இறகுபந்து அணி வீரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்திய ஒற்றையர் பிரிவு வீரர்கள் ஸ்ரீகாந்த்,பிரனாய் மற்றும் இரட்டையர் பிரிவின் வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கி, ரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோரை இந்தியாவே கொண்டாடி வருகிறது.
|