LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

இகர வருக்கம்

 

இரவி எனும்பெயர் எழுஞ்சூ ரியனுடன்
மலையும் வாணிகத் தொழிலும் வழங்குவர். ....194
இருளெனும் பெயரே கருமையு மயக்கமும்
நரகமுந் திமிரமு நவின்றனர் புலவர். ....195
இரலை யெனும்பெயர் மானி னேறும்
அசுபதியு மூதுங் கொம்பு மாமே. ....196
இறையெனும் பெயரே சிவனும் இல்லிறப்பும்
தலைமையுந் தலைவன் பெயருந் தங்கலும்
புள்ளிற குங்கை வரையும் சிறுமையும்
குடியிறைப் பெயரும் சொல்லும் கூறுவர். ....197
இடியெனும் பெயரே நென்மா முதலும்
உறுதி வார்த்தையும் அசனியும் ஓதுவர். ....198
இறாலெனும் பெயர்கார்த் திகையும் இடபமும்
தேன்கூ டுமொரு மீனுஞ் செப்புவர். ....199
இறும்பெனும் பெயரே தாமரைப் பூவும்
மலையும் காடும் வழங்கப் பெறுமே. ....200
இலஞ்சி யெனும்பெயர் மகிழமரப் பெயரும்
கொப்புளுந் தடாகமும் கூறுவர் புலவர். ....201
இடையெனும் பெயரெ இடமும் நுகப்பும்
நடுவும் எனவே நவிலப் பெறுமே. ....202
இகுளை யெனும்பெயர் சுற்றமும் பாங்கியும். ....203
இரதம் எனுபெயர் தேரும் இன்சுவையும்
அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம். ....204
இலம்பக மெனும்பெய ரத்தி யாயமும்
நுதலணிப் பெயருந் தொடையலு நுவலும். ....205
இந்தனம் எனும்பெயர் இசையும் காட்டமும்
நெருப்பிடு கலனு நிகழ்த்துவர் புலவர். ....206
இளியெனும் பெயரோ ரிசையும் யாழ்நரம்பும்
இகழ்ச்சியில் வருக்கப் பெயரும் இயம்புவர். ....207
இலையம் எனும்பெயர் கூத்தின் விகற்பமும்
கூத்தின் பெயருங் கேடுங் கூறுவர். ....208
இறைவை யெனும்பெயர் ஏணிநீர்ப் புட்டிலாம். ....209
இழுக்கம் எனும்பெயர் பிழைத்தல் பொல்லாங்குமாம். ....210
இறப்பெனும் பெயரே யிறத்தலும் மிகுதியும்
நடத்தலு மில்லி றப்பும் நவிலுவர். ....211
இலாங்கலி யெனும்பெயர் தென்ன மரமும்
கலப்பைப் பெயரும் வெண்காந்தளும் கருதுவர். ....212
இகுத்தல் எனும்பெயர் கொடுத்தலும் வீழ்த்தலும்
செகுத்தலு மவிர்தலும் இளைத்தலும் செப்புவர். ....213
இல்லெனும் பெயரே யில்லை யென்றலும்
இராசியு மனைவியு மனையும் இடமுமாம். ....214
இராசி யெனும்பெய ரோசையுங் கூட்டமும். ....215
இராசிய மெனும்பெயர் யோனியும் மறைவுமாம். ....216
இபமெனும் பெயரே மரத்தின் கொம்பும்
யானையின் பெயரும் இயம்புவர் புலவர். ....217
இகலெனும் பெயரே பெலமும் சமரமும்
பகையும் எனவே பகரப் பெறுமே. ....218
இடமெனும் பெயரிடப் புறமும் விசாலமும்
இடங்களின் விகற்பமும் செல்வமும் இயம்புவர். ....219
இடக்க ரெனும்பெயர் குடத்தின் பெயரும்
மறைத்திடு வார்த்தையும் வழங்கப் பெறுமே. ....220
இதழெனும் பெயர்பூ வினிதழு மதரமும்
பனைமடல் போலவும் பகரப் பெறுமே. ....221
இயமெனும் பெயரே யுரையும் ஓசையும்
வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே. ....222
இருபிறப் பெனும்பெய ரெயிறும் பறவையும்
பார்ப்பெனும் சாதியும் நிலவும் பகருவர். ....223
இருசெனும் பெயரே பண்டியுள் இரும்பும்
செவ்வையும் எனவே செப்புவர் புலவர். ....224
இவர்தல் எனும்பெயர் ஏறலும் விரும்பலும். ....225
இவறல் எனும்பெயர் ஓசையு மறப்புமாம். ....226
இழுமென லெனும்பெயர் இனிமையும் ஒலியுமாம். ....227
இறத்தல் எனும்பெயர் மிகுத்தலும் கடத்தலும்
மரணமும் எனவே வழங்கப் பெறுமே. ....228
இறுத்த லெனும்பெயர் தங்கலும் இயம்பலும்
ஒடித்தலும் எனவே யுரைத்தனர் புலவர். ....229
இளமை யெனும்பெயர் தண்மையும் காமமும்
இளமையின் பருவமு மியம்பப் பெறுமே. ....230
இரதி யெனும்பெயர் மதனன் றேவியும்
பித்தளைப் பெயரும் பிடியா னையுமாம். ....231
இக்கெனும் பெயரே மதுவும் கரும்புமாம். ....232
இறும்பூ தெனும்பெயர் மலையும் அதிசயமும்
சிறுதூறும் குழையுந் தகைமையும் செப்புவர். ....233
இடங்க ரெனும்பெயர் குடமும் தூர்த்தரும்
முதலையு மெனவே மொழிந்தனர் புலவர். ....234

 

இரவி எனும்பெயர் எழுஞ்சூ ரியனுடன்

மலையும் வாணிகத் தொழிலும் வழங்குவர். ....194

 

இருளெனும் பெயரே கருமையு மயக்கமும்

நரகமுந் திமிரமு நவின்றனர் புலவர். ....195

 

இரலை யெனும்பெயர் மானி னேறும்

அசுபதியு மூதுங் கொம்பு மாமே. ....196

 

இறையெனும் பெயரே சிவனும் இல்லிறப்பும்

தலைமையுந் தலைவன் பெயருந் தங்கலும்

புள்ளிற குங்கை வரையும் சிறுமையும்

குடியிறைப் பெயரும் சொல்லும் கூறுவர். ....197

 

இடியெனும் பெயரே நென்மா முதலும்

உறுதி வார்த்தையும் அசனியும் ஓதுவர். ....198

 

இறாலெனும் பெயர்கார்த் திகையும் இடபமும்

தேன்கூ டுமொரு மீனுஞ் செப்புவர். ....199

 

இறும்பெனும் பெயரே தாமரைப் பூவும்

மலையும் காடும் வழங்கப் பெறுமே. ....200

 

இலஞ்சி யெனும்பெயர் மகிழமரப் பெயரும்

கொப்புளுந் தடாகமும் கூறுவர் புலவர். ....201

 

இடையெனும் பெயரெ இடமும் நுகப்பும்

நடுவும் எனவே நவிலப் பெறுமே. ....202

 

இகுளை யெனும்பெயர் சுற்றமும் பாங்கியும். ....203

 

இரதம் எனுபெயர் தேரும் இன்சுவையும்

அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம். ....204

 

இலம்பக மெனும்பெய ரத்தி யாயமும்

நுதலணிப் பெயருந் தொடையலு நுவலும். ....205

 

இந்தனம் எனும்பெயர் இசையும் காட்டமும்

நெருப்பிடு கலனு நிகழ்த்துவர் புலவர். ....206

 

இளியெனும் பெயரோ ரிசையும் யாழ்நரம்பும்

இகழ்ச்சியில் வருக்கப் பெயரும் இயம்புவர். ....207

 

இலையம் எனும்பெயர் கூத்தின் விகற்பமும்

கூத்தின் பெயருங் கேடுங் கூறுவர். ....208

 

இறைவை யெனும்பெயர் ஏணிநீர்ப் புட்டிலாம். ....209

 

இழுக்கம் எனும்பெயர் பிழைத்தல் பொல்லாங்குமாம். ....210

 

இறப்பெனும் பெயரே யிறத்தலும் மிகுதியும்

நடத்தலு மில்லி றப்பும் நவிலுவர். ....211

 

இலாங்கலி யெனும்பெயர் தென்ன மரமும்

கலப்பைப் பெயரும் வெண்காந்தளும் கருதுவர். ....212

 

இகுத்தல் எனும்பெயர் கொடுத்தலும் வீழ்த்தலும்

செகுத்தலு மவிர்தலும் இளைத்தலும் செப்புவர். ....213

 

இல்லெனும் பெயரே யில்லை யென்றலும்

இராசியு மனைவியு மனையும் இடமுமாம். ....214

 

இராசி யெனும்பெய ரோசையுங் கூட்டமும். ....215

 

இராசிய மெனும்பெயர் யோனியும் மறைவுமாம். ....216

 

இபமெனும் பெயரே மரத்தின் கொம்பும்

யானையின் பெயரும் இயம்புவர் புலவர். ....217

 

இகலெனும் பெயரே பெலமும் சமரமும்

பகையும் எனவே பகரப் பெறுமே. ....218

 

இடமெனும் பெயரிடப் புறமும் விசாலமும்

இடங்களின் விகற்பமும் செல்வமும் இயம்புவர். ....219

 

இடக்க ரெனும்பெயர் குடத்தின் பெயரும்

மறைத்திடு வார்த்தையும் வழங்கப் பெறுமே. ....220

 

இதழெனும் பெயர்பூ வினிதழு மதரமும்

பனைமடல் போலவும் பகரப் பெறுமே. ....221

 

இயமெனும் பெயரே யுரையும் ஓசையும்

வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே. ....222

 

இருபிறப் பெனும்பெய ரெயிறும் பறவையும்

பார்ப்பெனும் சாதியும் நிலவும் பகருவர். ....223

 

இருசெனும் பெயரே பண்டியுள் இரும்பும்

செவ்வையும் எனவே செப்புவர் புலவர். ....224

 

இவர்தல் எனும்பெயர் ஏறலும் விரும்பலும். ....225

 

இவறல் எனும்பெயர் ஓசையு மறப்புமாம். ....226

 

இழுமென லெனும்பெயர் இனிமையும் ஒலியுமாம். ....227

 

இறத்தல் எனும்பெயர் மிகுத்தலும் கடத்தலும்

மரணமும் எனவே வழங்கப் பெறுமே. ....228

 

இறுத்த லெனும்பெயர் தங்கலும் இயம்பலும்

ஒடித்தலும் எனவே யுரைத்தனர் புலவர். ....229

 

இளமை யெனும்பெயர் தண்மையும் காமமும்

இளமையின் பருவமு மியம்பப் பெறுமே. ....230

 

இரதி யெனும்பெயர் மதனன் றேவியும்

பித்தளைப் பெயரும் பிடியா னையுமாம். ....231

 

இக்கெனும் பெயரே மதுவும் கரும்புமாம். ....232

 

இறும்பூ தெனும்பெயர் மலையும் அதிசயமும்

சிறுதூறும் குழையுந் தகைமையும் செப்புவர். ....233

 

இடங்க ரெனும்பெயர் குடமும் தூர்த்தரும்

முதலையு மெனவே மொழிந்தனர் புலவர். ....234

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.