|
|||||
இந்தியாவில் லஞ்ச ஊழல் மிகுந்த டாப் 10 நகரங்கள் !! |
|||||
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகமாக உள்ள பெங்களூர் நகரம்தான் இந்தியாவிலேயே லஞ்ச ஊழல் மிகுந்த நகரங்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஐபெய்ட்எபிரைப்(ipaidbribe) என்ற இணையதளம் இந்தியாவில் நடைபெறும் லஞ்ச ஊழல் தொடர்பான புகார்களை பதிவு செய்து வருகின்றது. இதுவரை 23,803 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள இந்திய நகரங்களின் வரிசைகள் இதோ, பெங்களூர் :
பெங்களூரில் ரூ 166405767 அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகை 5359 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 279 அதிகாரிகள் லஞ்சம் வாங்காத நேர்மையானவர்கள் என்று அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை :
மும்பையில் 1380 பேருக்கு ரூ 29389023 லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் :
ஹைதராபாத் நகரில் ரூ 293389023 லஞ்சப் பணம் 1380 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை :
சென்னையில் 1281 பேருக்கு ரூ 75111228 லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி :
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் ரூ44146079 லஞ்ச பணம் 915 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
புனே :
புனே நகரில் ரூ13454056 கோடி லஞ்சம் 865 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா :
கொல்கத்தாவில் ரூ16333425 கோடி லஞ்சம் 344 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
லக்னோ :
லக்னோவில் ரூ16020838 கோடி லஞ்சம் 243 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அகமதாபாத் :
அகமதாபாத்தில் ரூ 2726910 லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 210 பேருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. நொய்டா :
டெல்லியை அடுத்த நொய்டாவில் ரூ3676990 கோடி பணம் 192 பேரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. |
|||||
Bribe Trends by Cities | |||||
by Swathi on 27 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|