LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எனைத்தானும் நல்லவை கேட்க : 1 - பகுதி 1 குறளோடு உறவாடு –பேராசிரியர் முனைவர்.தெ. ஞானசுந்தரம் - மு.வ. பார்வையில் திருக்குறள்

மு.. பார்வையில் திருக்குறள் - பேராசிரியர் தெ. ஞானசுந்தரம்

மு.வரதராசனார்:

    மு. வரதராசனார் அவர்கள் தெளிந்த அறிவு உடையவர். திருக்குறளில் மிகுந்த ஈடுபாடு் உடையவர். இவர் எழுதிய திருக்குறள் உரை கையடக்கப் பதிப்பு தான் திருக்குறள் பரவக் காரணம் என்று சொல்லலாம். இவர் மிகச்சிறந்த பண்பாளர்.

‘புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

  ஏறுபோல் பீடு நடை’

என்ற குறளில் ‘ஏறு’ என்பது சிங்கத்தைக் குறிக்கின்றது என்று மு.வ. நினைத்தார். ஆனால் ஒரு சமயம் ஒரு எளியவர் வந்து ‘ஏறு’ என்பது காளையைக் குறிக்கின்றது என்று கூறினார். அது பொருத்தமானதாக இருந்ததால் மு.வ. அதை ஏற்றுக் கொண்டு உடனே திருத்தம் செய்தார். மிகச்சிறந்த பண்பாளர், குறள் வழி நடப்பவர், அறத்தை நம்பு, வாழ்வில் கடைப்பிடி என்று அறிவுரை வழங்கியவர்.

திருக்குறள் ஈடுபாடு:

    பாமரர்களுக்கும் திருக்குறள் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே மு.வ. திருக்குறள் உரை எழதினார். மிகவும் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதினார். பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்களுக்குத் திருக்குறளில் ஈடுபாடு வரக் காரணம் அவரது தந்தை வழி தாத்தா என்று கூறுவார். அவருக்கு அடுத்து பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்களுக்குத் திருக்குறளில் ஈடுபாடு வரக் காரணம் மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரை கையடக்கப் பதிப்பே என்று கூறுகிறார்.

உட்பகை:

‘உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

  மட்பகையின் மாணத் தெறும்’

    இக்குறளில் வரும் ‘மட்பகை’ என்பதற்கு ‘குயவன் கையில் வைத்திருக்கும் கருவி’ என்று பரிமேலழகர் உரை எழுதினார். ஆனால் ‘மட்பகை’ என்பதற்கான சரியான பொருள் ‘நிலநடுக்கமே’ ஆகும். திருக்குறளில் பொருள் குறித்த இடர்பாடு வரின் திருக்குறளைக் கொண்டே அதைக் களைய முற்பட வேண்டும்.

திருக்குறளைப் பின்பற்றியோர்:

    திருக்குறளைப் பின்பற்றியோர் கவிஞர்களாகி இருக்கிறார்கள். திருக்குறளுக்குப் பின் வந்த நூல்கள் எல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டி இருக்கின்றன. திருக்குறள் தாக்கம் இல்லாத பிற்கால நூல்கள் எதுவுமே இல்லை என்று கூறலாம். எக்காலத்திற்கும் திருக்குறள் பொருந்தும் என்பது சாலப்பொருந்தும்.

by Lakshmi G   on 20 Sep 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.