மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை மற்றும் ‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களின் உயர் கல்வி மாணவர்களுக்கு, நாட்டின் குறிப்பிடத்தக்க 100 சுற்றுலா தலங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதில் கர்நாடகாவின் 7 இடங்களும் அடங்கும்.
நாட்டின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில், கர்நாடகாவின் ஐஹொளே, பேலுார், ஸ்ரீரங்கப்பட்டணம், விஜயபுரா, ஹம்பி, பட்டதகல்லு, ஸ்ரவண பெளகோலா என ஏழு சுற்றுலாதலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு நாட்டின் வெவ்வேறு மாநிலங்களின், உயர்கல்வி மாணவர்கள் அனுப்பப்படுவர்.
கர்நாடகாவின் கலை, கலாசாரம், மொழி, சிறப்பம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வாய்ப்பளிக்கப் படுகிறது. அதுபோல, கர்நாடகாவின் உயர் கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களை நாட்டின் 93 சுற்றுலா இடங்களுக்கு அனுப்பி அங்குள்ள கலை, கலாசாரம், மொழி, சிறப்பம்சங்களை ஆய்வு செய்யலாம்.
நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், நாம் இந்தியர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவது, ‘ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா’ திட்டத்தின் நோக்கமாகும்.
|