சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள் என்பது சிறப்பு.திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்-கோகர்ணேஸ்வரர் ஆலயத்துடன் இணைக்கப்பட்டு புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் பராமரிப்பில் இயங்கி வந்த இக்கோயில், தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இயங்கி வருகின்றது.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள். அருள் வாக்கின்படி, அம்மனின் திருவருவை பூமியிலிருந்து தோண்டி எடுத்து பச்சைக் கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.
அந்த சமயத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மன்னருக்குச் சொந்தமானதாய் இருந்ததால், சமஸ்தானமாக பெரும்புகழோடு விளங்கியது. பொருளாதார செலவாணிக்காக அம்மன் காசு அடித்து தனியாக நிர்வாகம் செய்த திறமையும், அந்தஸ்தும் புதுக்கோட்டைக்கே உரியதாக இருந்தது. |