|
||||||||||||||||||
அம்மா நீ எங்கே… |
||||||||||||||||||
முட்டையோடு உடைந்தது. அந்தக் கோழிக்குஞ்சு தலையை நீட்டி எட்டிப் பார்த்தது.அங்கும் இங்கும் பார்த்தது. மெல்ல உடம்ப வளைத்து, நெளித்து முட்டைக்குள்ளேருந்து வெளியே வந்தது.
இந்த உலகத்து வந்த புது ஜீவன் அது. அதுக்கு எல்லாமே புதுசா இருந்தது. என் அம்மா எங்கே. அவங்க யாரைப் போலிருப்பாங்க...
அது தன்னோட பிஞ்சு கால்களை மெல்ல வைத்து நடந்து போனது.
நாற்காலிக்கு அடியில் வாலைச் சுருட்டி வைத்து கொண்டு பூனக்குட்டி ஒன்று தூங்கிட்டு இருந்தது. ஹலோ... ஹலோ...என்று கோழிக்குஞ்சு பூனைக்குட்டியைக் கூப்பிட்டது. பூனை மெல்ல கண்களை திறந்து பார்த்தது.
"ம் உனக்கு என்ன வேண்டும் என்று" கேட்டது. "நீதான் என்னோட அம்மாவா? " கோழிக்குஞ்சு கேட்டது பூனக்குட்டி தன்னையும் பார்த்தது, கோழிக்குஞ்சையும் பார்த்தது., அப்புறம் வெடுக்கு என்று சொல்லியது.
"இல்லை இல்லை நான் உன் அம்மா இல்லை. என் உடம்பெல்லாம் முடியாக இருக்கு. உன் உடம்பிலே முடியே இல்லையே" என்று மறுபடியும் தூங்கத் தொடங்கியது.
கோழிக்குஞ்சு மறுபடியும் நடந்தது... வீட்டு முற்றத்தில் ஒரு நாய்க்குட்டி தெருவைப் பார்த்து நின்று கொண்டிருந்தது. கோழிக்குஞ்சு அதுகிட்ட போனது. ஹலோ.. ஹலோ...என்றது நாய்க்குட்டி திரும்பிப் பார்த்து "ம் உனக்கு என்ன வேண்டும்? " என்று நாய்க்குட்டி கேட்டது.
நீதான் என் அம்மாவா? கோழிக்குஞ்சு கேட்டது நாய் தன்னையும் பார்த்தது, கோழிக்குஞ்சையும் பார்த்தது "இல்லை, இல்லை எனக்கு வாலு இருக்கு உனக்கு வாலு இல்லை நான் உன் அம்மா இல்லை... " என்று சொல்லி விட்டு தெருவுக்கு ஒடிப்போயி விட்டது.
கோழிக்குஞ்சு பிஞ்சுகாலை எடுத்து வைத்து நடக்கத் தொடங்கியது. தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி இலையை கடித்து கொண்டு நிர்ப்பதை பார்த்தது. கோழிக்குஞ்சு தன்னை பார்த்து வருவதைப் பார்த்த ஆடு இலை சாப்பிடுவதை நிறுத்தி "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டது.
"நீதான் என் அம்மாவா" என்று கேட்டது கோழிக்குஞ்சு. "ஐய்யய்யே... எனக்கு நாலு காலு இருக்கு. உனக்கு இரண்டு காலு தானே இருக்கு நான் உன் அம்மா இல்லேண்ணு சொல்லிட்டு" இலையை தின்னத்தொடங்கியது ஆடு.
நடந்து நடந்து ஒரு குளத்துக்கிட்டே வந்தது. அங்கே ஒரு வாத்து நின்று கொண்டிருந்தது
கோழிக்குஞ்சு அதைப் பார்த்தது. இரண்டு கால், உடம்பிலே முடியில்லை, அதுக்கு வாலுமில்லை. அப்ப அதுதான் என்னோட அம்மா... என்று நினைத்துகொண்டு அம்மா என்று கத்தி ஓடியது.
வாத்து கோழிக்குஞ்சை நல்லா பார்த்தது. "உனக்கும் இரண்டு கால், எனக்கும் இரண்டு கால். உனக்கு வால் இல்லை எனக்கும் வால் இல்லை. ஆனா நான் குவாக் குவாக் ணு பேசுவேன் நீ எப்படி பேசுவே" என்று கேட்டது.
கோழிக்குஞ்சு வாயை நல்லாத் திறந்து கீ கீ என்று கத்தியது. கோழிக்குஞ்சு கத்தற சத்தம் கேட்டு குப்ப மேட்டை கிளறிட்டிருந்த தாய்க்கோழி ஓடி வந்தது.
நான் தாண்டி செல்லம் உன் அம்மாண்ணு சொல்லி கோழிக்குஞ்சுக்கு முத்தம் கொடுத்தது.தன் இறக்கைக்கடியிலே வைத்து சூடு கொடுத்தது கோழிக்குஞ்சுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்குதா... |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 3 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|