|
||||||||
ஆலு கோபி ப்ரை (Alu Gopi Fry) |
||||||||
தேவையானவை : உருளை கிழங்கு - 2 உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் காலிஃப்ளவர் - 1 கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் காஷ்மீரி சில்லி பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கு காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயப்பொடி செய்முறை : 1.காலிஃப்ளவர் மற்றும் உருளை கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கவும், 2.ஒரு கடாயில் வெந்நீரை கொதிக்க வைத்து கொஞ்சமாக உப்பு சேர்த்து காலிஃப்ளவரையும், உருளையையும் அதில் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து வெந்நீரை வடித்துவிடவும். 3.ஒரு பெரிய வாணலியை காயவைத்து அதில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.வடித்து வைத்த காலிஃப்ளவர் மற்றும் உருளையை சேர்த்து நன்கு கிளறவும்.தீயின் அளவை குறைத்து வைத்து 5 நிமிடம் வேகவிடவும். 4.பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து பெருங்காய பொடி ஒரு சிட்டிகை தூவி மீண்டும் 5 நிமிடம் வேக விடவும். 5.இறுதியாக தீயின் அளவை அதிகப்படுத்தி மொறுகலாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.சுவையான காரசாரமான ஆலு கோபி ரெடி. |
||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|