வீரபத்திரர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இந்த அமைப்பை, "ருத்ரபாலகர்' என்பர். மார்பில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். வீரபத்திரரின்
அருகில் ஆட்டுத்தலையுடன் வணங்கிய நிலையில் இருக்கும் தட்சனைக் காண முடியும். இத்தலத்தில், காலுக்குக் கீழே தட்சனை சம்ஹாரம் செய்த கோலத்தில்
காட்சி தருகிறார். வீரபத்திரர் கையிலுள்ள சூலம் தட்சனின் கழுத்தில் பாய்ந்தநிலையில், உயிர்ப்புடன் இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தனது ஒரு
கையில் தட்சன் நடத்திய யாகத்தில் அவிர்பாகம் பெற்ற தேவர் ஒருவரை பிடித்திருக்கிறார். மற்றொரு கையில் யாகத்தில் பயன்பட்ட மணியை வைத்திருக்கிறார்.
இத்தகைய அமைப்பில் வீரபத்திரரை தரிசிப்பது அபூர்வம்.நிலத்தகராறு, விளைச்சல் குறைவு, பாதியில் கட்டடப்பணியை நிறுத்தி வைத்திருப்பவர்கள் தங்கள்
பிரச்னை தீர இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செவ்வாய் கிரகம் நிலத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் கிழமைகளில் தங்களது நிலத்தில்
இருந்து சிறிது மண்ணை எடுத்து வந்து, வீரபத்திரரின் பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். பின்பு அந்த மண்ணையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று, தங்கள்
நிலத்தில் சேர்த்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை.
வீரபத்திரர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இந்த அமைப்பை, "ருத்ரபாலகர்' என்பர். மார்பில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். வீரபத்திரரின் அருகில் ஆட்டுத்தலையுடன் வணங்கிய நிலையில் இருக்கும் தட்சனைக் காண முடியும். இத்தலத்தில், காலுக்குக் கீழே தட்சனை சம்ஹாரம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். வீரபத்திரர் கையிலுள்ள சூலம் தட்சனின் கழுத்தில் பாய்ந்தநிலையில், உயிர்ப்புடன் இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தனது ஒரு கையில் தட்சன் நடத்திய யாகத்தில் அவிர்பாகம் பெற்ற தேவர் ஒருவரை பிடித்திருக்கிறார். மற்றொரு கையில் யாகத்தில் பயன்பட்ட மணியை வைத்திருக்கிறார். இத்தகைய அமைப்பில் வீரபத்திரரை தரிசிப்பது அபூர்வம்.நிலத்தகராறு, விளைச்சல் குறைவு, பாதியில் கட்டடப்பணியை நிறுத்தி வைத்திருப்பவர்கள் தங்கள் பிரச்னை தீர இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
செவ்வாய் கிரகம் நிலத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் கிழமைகளில் தங்களது நிலத்தில் இருந்து சிறிது மண்ணை எடுத்து வந்து, வீரபத்திரரின் பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். பின்பு அந்த மண்ணையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று, தங்கள் நிலத்தில் சேர்த்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. |