|
|||||
திருக்கோவிலூர் அருகே கண்டறியப்பட்ட கொற்றவை சிற்பம் |
|||||
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், டி.குன்னத்தூர் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது 6- வது நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனர். இதுகுறித்து ஆய்வு நடுவதைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது:
இங்குள்ள ஏரிக்கரை எதிரே உள்ள நிலத்தில் கிழக்கு பார்த்தவாறு கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. 6 அடி உயரம், 2 அடி அகலமுள்ள இந்தச் சிற்பத்தில் கொற்றவை வடிவம் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சடையுடன் கூடிய கரண்ட மகுடம், நீண்ட காதணிகள், மார்பு, இடுப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடையுடன் உடை நேர்த்தியான மடிப்புகள் காணப்படுகின்றன. தோள்களில் வளைகள், காலில் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
பல்லவர் காலத்தைச் சேர்ந்தது
8 கரங்களுடன் கூடிய கொற்றவை உருவில் வலப்புற 4 கைகள் அபய முத்திரை, அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளன. இடப்புற 4 கைகளில் ஒன்று இடுப்பில் வைத்தவாறும், மற்ற கைகள் சங்கு, வில், கேடயம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளன. சிற்பத்தின் இடைப் பகுதியில் பெரிய அளவில் கடமான் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் கால் எருமைத் தலையின் அமைந்துள்ளது.
சங்க இலக்கியங்களில் இலக்கணத்துடன் இந்தச் சுட்டிக்காட்டிய சிற்பம் அமைந்துள்ளது. சிற்ப அமைப்பு, அதிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளைக் கொண்டு அதன் காலம் 6-ஆம் நூற்றாண்டின் இறுதியை (பல்லவர் காலத்தை) சேர்ந்ததாக இருக்கலாம் 6T601 அறிய முடிகிறது. சிற்பத்தின் வலப்புறமுள்ள கல்வெட்டு வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இதில் 'பெருவா இலார் மகன் தோறன்' என்று ஊகித்துப் படித்தறியமுடிகிறது. இது கொற்றவை சிற்பத்தைச் செய்தளித்தவரின் பெயராக இருக்கலாம்.
தமிழ்நாட்டில் திருக்கோவிலூர் பகுதியில்தான் அதிகளவில் கொற்றவை சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. தாய்த் தெய்வ வழிபாட்டின் தொட்டிலாக இந்தப் பகுதி விளங்குகிறது. தமிழக தொல்லியல் துறை இதுபோன்ற இதுபோன்ற அரிய சிற்பங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தனர். |
|||||
by Kumar on 07 Feb 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|