LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகைப் பறவைகள் பதிவு.

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட குளங்களில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கிய போது, அரிய வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

 

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட, உடுமலை அருகேயுள்ள மருள் பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்ன வீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், உப்பாறு அணை உள்ளிட்ட, 20 நீர் நிலைகளில், ஒருங்கிணைந்த ஈர நிலப் பறவைகள், இரு நாட்கள் கணக்கெடுப்பு துவங்கியது.

 

வனத்துறையினர், திருப்பூர் இயற்கை கழகம் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று, கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி, தரவு புத்தகம் ஆகியவற்றை வழங்கப்பட்டு, குளங்கள் மற்றும் கரையிலுள்ள புதர்களில் வசிக்கும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது.

 

உடுமலை வனச்சரகர் சிவக்குமார், உயிரியலாளர் மகேஷ்குமார், தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகிகள் ரவிக்குமார், கார்த்திகேயன் மற்றும் வனத்துறை குழுவினரால், செங்குளம், பெரிய குளம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலுள்ள குளங்களில் கணக்கெடுப்பு நடந்தது.

 

இதில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள், நீர்நிலைகளின் அருகிலுள்ள உள்ள புதர்களில் வசிக்கும் அரிய வகைப் பறவைகள், வண்ணங்களில் அழகாகவும், சிறப்பு மிகுந்த குணாதிசயங்களைக் கொண்ட பறவைகள் நேரில் பார்க்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.

 

வனத்துறையினர் கூறியதாவது,  "ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பும், உள்நாடு மற்றும் வெளி நாட்டுப் பறவைகள், வசிப்பதற்கான இயற்கைச் சூழல் மற்றும் மீன், பூச்சி இனங்கள் என வளமான பகுதியாக உள்ளது.

 

இதனால், அரிய வகைப் பறவை இனங்கள் ஏராளமாக வசித்து வருகின்றன. வலசை போதல் நிகழ்வாக, பல ஆயிரம் கி.மீ.,துாரம் பயணித்து, இக்குளங்களுக்கு வந்து, முட்டையிட்டு அடை காத்து, குஞ்சு பொரித்தும் வருகின்றன.

கணக்கெடுப்பில், மாங்குயில், நீல தாளைக் கோழி, நீர்க் காகம், புள்ளிச்சில்லை, நாமக்கோழி சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன் கொத்தி, பச்சைக் கிளி, கரிச்சான், நீல வால் பஞ்சுருட்டான், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, கதிர் குருவி, சிட்டுக் குருவி, குயில், கவுதாரி, பனை உழவாரன், வால் காக்கை என, ஒரே நாளில், 34 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

குளம், குட்டைகள் வளமாகவும், ஈர நிலங்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள பறவை இனங்கள், வெளி நாடுகளிலிருந்து, 'வலசை' போதல் நிகழ்வாக வரும் பறவை இனங்களைக் காக்கவும், அவற்றின் வாழ்வியல் சூழல்களைச் சிதைக்காமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது" இவ்வாறு, கூறினர்.

 

644 இடங்களில் கணக்கெடுப்பு

 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 644 நீர் நிலைகளில் நடந்த ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில், பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

முதற்கட்டமாக, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 28/01/2024-ம் தேதி 644 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

by Kumar   on 30 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.