பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா என்ற கலைவிழா சென்னையில் 13/01/2024 அன்று தொடங்கியது . தீவுத்திடலில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திரு விழாவைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வருகிற 17-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சென்னை மக்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிராமியக் கலைஞர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் 18 இடங்களில் இந்தக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன. இங்குச் சுவையான கிராமிய உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
|