LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- உலக நாடுகளில் தமிழர்கள்

இந்தியர்கள் 3 வருடத்தில் ஜெர்மனியில் குடியுரிமை வாங்க முடியும்..!!

ஜெர்மனி நாட்டில் நீண்ட காலமாகக் குடியுரிமை விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்க வேண்டும் என்ற பேச்சு அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், நிறுவனங்கள், அரசியல் வட்டாரங்கள் மத்தியிலிருந்து வருகிறது.

 

ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பு கூட மொழி தொடர்பான கட்டுப்பாடுகளிலும், விதிமுறைகளிலும் தளர்வு அளிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் புதிய குடியுரிமைச் சட்டத் தளர்வுகளுக்கு 382-க்கு 234 வாக்குகள் பெற்று நடைமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

 

இப்புதிய சட்டத் திருத்தம் மூலம் ஜெர்மனியில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறும் விதிமுறைகளில் தளர்வுகளும், இரட்டைக் குடியுரிமை விதிமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தளர்வுகள் மூலம் ஜெர்மனியில் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் எளிதாகவும், அதிகளவிலும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடியும்.

 

ஜெர்மனியில் பல லட்சம் இந்தியர்கள்

 

ஜெர்மனி நாட்டு மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் அதாவது 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியுரிமை இல்லாமல் உள்ளனர், இதில் 5.3 மில்லியன் மக்கள் ஜெர்மனியில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக வசித்து வருகிறார்கள் என்பதை விளக்கி இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகமான வெளிநாட்டினரைப் பணியில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதோடு ஜெர்மனியில் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வரும் வேளையில் இவர்களுக்குக் குடியுரிமை பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது.

by Kumar   on 23 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.