|
||||||||||||||||||
கோழி உப்புக் கறி (chicken uppu curry) |
||||||||||||||||||
தேவையானவை: கோழிக் கறி - ஒரு கிலோ சி.வெங்காயம் - நூறு கிராம் தக்காளி - ஒன்று ப. மிளகாய் - ஐந்து வர மிளகாய் - ஐந்து பூண்டு - ஐந்து பல் மஞ்சள் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - இரண்டு கொத்து கொத்தமல்லி - இரண்டு டேபிள் ஸ்பூன் ரீபைண்டு ஆயில் - மூன்று டேபிள் ஸ்பூன் உப்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.முதலில் கோழிக்கறியை சிறிது சிறிதாக வெட்டி நன்றாக கழுவி மஞ்சள் பொடி போட்டு பிசறி வைக்கவும் 2.சீரகம், சோம்பு இரண்டையும் எண்ணை விடாமல் வறுத்து பொடிக்கவும். 3.கடாயை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி பொடித்து வைத்த சீரகம், சோம்பு போடவும். வாசணை வந்ததும் வர மிளகாய் கிள்ளிப் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, ப. மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும். 4.நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி போடவும்.மூன்று நிமிடம் கழித்து கோழி துண்டுகளையும், உப்பையும் போட்டு பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும். 5.இருபது நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றி கொத்த மல்லி கொண்டு அலங்கரிக்கவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|