2009-2010ல் தமிழ் எழுத்துகள் பல் வேறு வகைகளில் அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தமிழ் எழுத்துகளுக்கு ஏற்பட்ட சோதனை இன்னும் நீங்காதிருப்பதால், 2013ல் எ.பா.இ நிலைக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு, இவ்வியக்கத்திற்குத் தக்கோரை மேலும் கொண்டு வந்து சேர்த்தும் எழுத்துகளுக்கான ஆபத்துகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவதையும் தலையாய பணியாகக் கொண்டுள்ளது. |