வீரபத்திரர் தவமிருந்து சிவனை வழிபட, அவருக்கு ஈசன் ரிஷபாரூடராகத் திருக்காட்சி தந்த சிறப்புடையது.தட்சன், தான் நடத்தும் யாகத்துக்கு
அனைவரையும் அழைத்து விட்டு, உலகாளும் நாயகனும் தனது மாப்பிள்ளையுமான சிவனாரை மட்டும் அழைக்காமல் புறக்கணித்தார். அந்த அவமானம்
கோபமாக மாற, கோபத்தில் கண்கள் சிவக்க, கடும் உக்கிரத்துடன் சிவனார் உருவாக்கிய திருவுருவம்தான் வீரபத்திரர். சிவனாரின் மொத்தச்
சக்தியையும் ஒருங்கே கொண்ட வீரபத்திரர், யாகத்தைச் சீர்குலைத்து, தட்சனை அழித்தொழித்தார். வீரபத்திரரை வணங்கினால், மனதில் உள்ள
பயங்கள் யாவும் நீங்கி, தைரியம் பெறலாம்; சிவனருள் கிடைக்கப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பது ஐதீகம்!சுவாமி ஒப்பிலா மணீஸ்வரரும்
சௌந்தர்ய கனகாம்பிகையும் கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகின்றனர். வைகாசி மாதத்தில், அஷ்டமி நாளின்போது, துர்கையின் சந்நிதிக்கு எதிரே, மகா
சண்டி ஹோமம் விமரிசையாக நடைபெறும்.
வீரபத்திரர் தவமிருந்து சிவனை வழிபட, அவருக்கு ஈசன் ரிஷபாரூடராகத் திருக்காட்சி தந்த சிறப்புடையது. தட்சன், தான் நடத்தும் யாகத்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு, உலகாளும் நாயகனும் தனது மாப்பிள்ளையுமான சிவனாரை மட்டும் அழைக்காமல் புறக்கணித்தார். அந்த அவமானம் கோபமாக மாற, கோபத்தில் கண்கள் சிவக்க, கடும் உக்கிரத்துடன் சிவனார் உருவாக்கிய திருவுருவம்தான் வீரபத்திரர்.
சிவனாரின் மொத்தச் சக்தியையும் ஒருங்கே கொண்ட வீரபத்திரர், யாகத்தைச் சீர்குலைத்து, தட்சனை அழித்தொழித்தார். வீரபத்திரரை வணங்கினால், மனதில் உள்ள பயங்கள் யாவும் நீங்கி, தைரியம் பெறலாம், சிவனருள் கிடைக்கப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பது ஐதீகம்!சுவாமி ஒப்பிலா மணீஸ்வரரும் சௌந்தர்ய கனகாம்பிகையும் கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகின்றனர். வைகாசி மாதத்தில், அஷ்டமி நாளின்போது, துர்கையின் சந்நிதிக்கு எதிரே, மகா சண்டி ஹோமம் விமரிசையாக நடைபெறும். |