சிவன் சன்னதியின் முன்பு சுமார் ஒன்பதடி உயரத்தில் துவார பாலகர்கள் உள்ளது சிறப்பு.ஒரு முறை சங்கரா பரணி நதியில் வெள்ளம் புரண்டோடி
ஊரையே அழிக்கும் நிலை ஏற்பட்டது. இங்குள்ள அம்மன் மங்களாம்பிகையின் கால்பட்டு வெள்ளம் தணிந்தது. திருவாதிரைத் திருவிழாவில்
நந்தீஸ்வரரும்,மங்களாம்பிகையும் மதியம் புறப்பட்டு வருவர். சிவனை கண்ட அம்மன், சினந்து பாதி வழியிலேயே தன் பிள்ளைகளுடன் கோயில்
வந்தடைவார். தனக்கும், பரவை நாச்சியார்க்கும் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்திட பெருமான் இரவில் இருமுறை தூது சென்ற நன்றியால் சுந்தரர்
அம்மனிடம் தூது சென்று இருவரையும் சேர்த்து வைப்பார். சுந்தரர் தூது சென்ற சிறப்பு ஆதிரைத் திருநாளில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது.
இங்குள்ள ஆற்றை சங்கரன் தனது பரணியால் சுத்திகரித்ததால் சங்கரா பரணி என்று அழைக்கப்படுகிறது.
சிவன் சன்னதியின் முன்பு சுமார் ஒன்பதடி உயரத்தில் துவார பாலகர்கள் உள்ளது சிறப்பு. ஒரு முறை சங்கரா பரணி நதியில் வெள்ளம் புரண்டோடி ஊரையே அழிக்கும் நிலை ஏற்பட்டது. இங்குள்ள அம்மன் மங்களாம்பிகையின் கால்பட்டு வெள்ளம் தணிந்தது. திருவாதிரைத் திருவிழாவில் நந்தீஸ்வரரும்,மங்களாம்பிகையும் மதியம் புறப்பட்டு வருவர். சிவனை கண்ட அம்மன், சினந்து பாதி வழியிலேயே தன் பிள்ளைகளுடன் கோயில் வந்தடைவார்.
தனக்கும், பரவை நாச்சியார்க்கும் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்திட பெருமான் இரவில் இருமுறை தூது சென்ற நன்றியால் சுந்தரர் அம்மனிடம் தூது சென்று இருவரையும் சேர்த்து வைப்பார். சுந்தரர் தூது சென்ற சிறப்பு ஆதிரைத் திருநாளில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. இங்குள்ள ஆற்றை சங்கரன் தனது பரணியால் சுத்திகரித்ததால் சங்கரா பரணி என்று அழைக்கப்படுகிறது. |