மாசி சிவராத்திரி விழா 3 நாட்கள் நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை நடக்கிறது. மறுநாள் அவர் அம்பாளுடன்
முத்துப்பல்லக்கில் வீதியுலா செல்கிறார்.ஐப்பசி பவுர்ணமியில் ஜங்கமேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு
அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண், பெண் இருபாலருக்கும் பிரசாதமாகத் தருவர். ஆனால், இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த
ஸ்பெஷல் பிரசாதம் வழங்கப்படுகிறது.நவக்கிரக சன்னதி எதிரில், ராஜகணபதி இருக்கிறார். நவக்கிரக சன்னதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில்
இருப்பதால் இவர் "அனுக்கிரக மூர்த்தி'யாக காட்சி தருகிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விநாயகர் மற்றும் சனீஸ்வரரை வழிபடுகிறார்கள். சிவன்
சன்னதி எதிரே மேல் விதானத்தில், 12 ராசிகளுடன் கூடிய ராசிக்கட்டம் மற்றும் ராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன.பவுர்ணமி, அமாவாசை, மாத
சிவராத்திரிகளில் வீரபத் திரருக்கு நடக்கும் பூஜையில், மொச்சைப்பயிறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு படைத்து வழிபடுகின்றனர்.வீரபத்திரருக்கு வில்வம்,
வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம்.
மாசி சிவராத்திரி விழா 3 நாட்கள் நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை நடக்கிறது. மறுநாள் அவர் அம்பாளுடன் முத்துப்பல்லக்கில் வீதியுலா செல்கிறார். பவுர்ணமியில் ஜங்கமேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண், பெண் இருபாலருக்கும் பிரசாதமாகத் தருவர்.
ஆனால், இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் பிரசாதம் வழங்கப்படுகிறது. நவக்கிரக சன்னதி எதிரில், ராஜகணபதி இருக்கிறார். நவக்கிரக சன்னதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் இருப்பதால் இவர் "அனுக்கிரக மூர்த்தி'யாக காட்சி தருகிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விநாயகர் மற்றும் சனீஸ்வரரை வழிபடுகிறார்கள்.
சிவன் சன்னதி எதிரே மேல் விதானத்தில், 12 ராசிகளுடன் கூடிய ராசிக்கட்டம் மற்றும் ராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன. பவுர்ணமி, அமாவாசை, மாத சிவராத்திரிகளில் வீரபத் திரருக்கு நடக்கும் பூஜையில், மொச்சைப்பயிறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு படைத்து வழிபடுகின்றனர். வீரபத்திரருக்கு வில்வம், வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். |