குறவன் குறத்தி ஆகிய இருவரின் உரையாடலும், பாட்டும், ஆட்டமும் கலந்த நிகழ்ச்சி குறத்திக்களி ஆகும். இக்கலையில் குறத்தி முக்கியமான பாத்திரமாகையால் குறத்தி நிகழ்த்தும் களி என்ற பொருளில் இது வழங்குகிறது. இது மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. இக்கலையானது கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் உள்ள நாட்டார் தெய்வக் கோவில்களிலும், பிற தெய்வக் கோவில்களிலும் நடைபெறும் விழாக்களில் பொழுதுபோக்குக் கலையாக நிகழ்த்தப்படுகிறது. இக்கலைக்குரிய பின்னணி இசைக்கருவிகள் உடுக்கு, தபேலா, ஆர்மோனியம், மகுடி ஆகியனவாகும். இக்கலையை தற்சமயம் மிகச்சிலரே நிகழ்த்தி வருகின்றனர்.
|