|
||||||||
கோவையில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்டத் திருவள்ளுவர் சிலை. |
||||||||
கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் செய்யப்பட்ட 25 அடி உயரம் கொண்ட பிரமாண்டத் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது.
நெற்றியில் அறம் என்ற வார்த்தை
இந்த திருவள்ளுவர் சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சில சொற்களும் இடம் பெறும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மழையையும், வெயிலையும் தாங்கும் வகையில், துருப்பிடிக்காத வகையில் எஃகால் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவள்ளுவர் சிலை 2.50 டன் எடையில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளால் ஜொலிக்கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திருவள்ளுவர் சிலை அனைவரையும் கவரும் வண்ணம் அமைய உள்ளது.
இந்தச் சிலை கூடிய விரைவில் மக்கள் பார்வைக்காகத் திறக்கபட உள்ளது. இச்சிலைத் திறக்கப்பட்டால் கோவையின் ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் முக்கியமான அடையாளமாகத் திகழும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். |
||||||||
by Kumar on 20 Jan 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|