|
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட பயிற்சிக் கூட்டம். |
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் நாமக்கல் மாவட்டம் , பெரம்பலூர் மாவட்டத்திற்கான முற்றோதல் மாவட்டப் பயிற்சியாளர் பயிற்சிக் கூட்டம் 04/01/2024 அன்று நடைபெற்றது.
இதில் முனைவர் திருமலை ராசா நாமக்கல் மாவட்டத்தின் பயிற்சியாளராகவும், தமிழ்ச்செம்மல் செ.வினோதினி பெரம்பலூர் மாவட்டத்தின் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றனர்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், திருக்குறள் படித்தவர்கள் , பயிற்சியளிக்க ஆர்வமுள்ளவர்கள் முற்றோதல் பயிற்சியாளராக விரும்பினால் தொடர்புகொள்ளவும்.
தலைமைப் பயிற்சியாளர்களால் உரிய வழிகாட்டுதலும், பயிற்சியும் வழங்கப்படும்.
பயிற்சியாளர் பயிற்சிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பேராசிரியர் முனைவர். மோகனசுந்தரம் அவர்கள் கோவையிலிருந்து பொறுப்பேற்றுள்ளார். இவர் நான்கு பொறியியல் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசின் பல முக்கிய தொழில்நுட்பக் குழுக்களில் பங்காற்றியவர். திருக்குறளை முழுமையாக உள்வாங்கியவர்.
திருக்குறள் மக்களிடம் வாழ்வியலாகச் சென்றுசேர ஊர் கூடித் தேரிழுப்போம்.
-உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் |
||||||||
by Kumar on 05 Jan 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|