|
|||||
காசி காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் 13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு புத்தகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி |
|||||
உத்தரப்பிரதேசத்தின் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்டகாலப் பாரம்பரிய, கலாச்சாரத் தொடர்பு இருந்து வருகிறது. இதைப் புதுப்பிக்கும் நோக்கில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் ஒரு மாதக் காலத்திற்கு காசி- தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
**************************************
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரப்பிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.
***************************************
வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். இன்று தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம், டிசம்பர் 19 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.
****************************************************
13 மொழிகளில் திருக்குறள்
****************************************
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு புத்தகத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன்படி சம்ஸ் கிருதம், இந்தி, மராத்தி, ஒடியா, மலையாளம், சவுராஷ்டிரி, நரிக் குறவர்களின் வாக்ரிபோலி, படுகு, நேபாளி, அரபி, உருது, பாரசீகம், கெமர் ஆகிய 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
சிஐசிடிஎல் சார்பில் ஏற்கெனவே 2012-ல் பஞ்சாபி மற்றும் மணிப்புரியிலும் 2014-ல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் 2015-ல் குஜராத்தியிலும் திருக்குறள் வெளியாகியுள்ளது.
**********************************************
76 இந்திய மொழிகளிலும் திருக்குறள்
*********************************************
இதன் தொடர்ச்சியாக உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஐரிஷ், தாய், மலாய், பர்மீஸ், சுவிடீஷ், டேனிஷ், கொரியன், ஜப்பானிய உள்ளிட்ட 10 அயலக மொழிகளிலும் அஸ்ஸாமி, துளு, போஜ்புரி, சந்தாலி, கொங்கணி, பேடோ, சிந்தி, மைதிலி, மால்டோ உள்ளிட்ட 76 இந்திய மொழிகளிலும் திருக்குறள் வெளியாக உள்ளது.
********************************
பிரதமர் மோடி, 100 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று மத்தியச் செம்மொழி நிறுவனத்திடம் விருப்பம் தெரிவித்ததே இதற்குக் காரணம் ஆகும்.
*******************************************
தஞ்சாவூரைச் சேர்ந்த முனைவர் எம்.கோவிந்தராஜன், இந்தியில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார். இவர் மொழி களை இணைக்கும் அலகாபாத் அமைப்பான பாஷா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பிரதமர் மோடியின் `சாக்ஷி’எனும் நூலை ‘அன்னையின் திருவடிகளுக்கு 2020’ எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
****************************************
ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, விளக்கம்
**********************************
சமஸ்கிருதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேராசிரியர் எஸ்.ராஜகோபாலன், அரபியில் ராமநாதபுரம் பேராசிரியர் ஏ.பஷீர் அகமது ஜமாலி, உருதுவில் சென்னை பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் அமானுல்லா, பாரசீகத்தில் இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி எஸ்.சாத்தப்பன் எனப் பலர் மொழிபெயர்த்துள்ளனர்.
***************************************
இந்த மொழிபெயர்ப்பு அனைத்தும் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.
*********************************
இந்தநிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.,முருகன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
**********************************
இருபிராந்தியங்களிலிருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவவாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் போன்றோர் அறிவு மற்றும் கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
உத்தரப்பிரதேசத்தின் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்டகாலப் பாரம்பரிய, கலாச்சாரத் தொடர்பு இருந்து வருகிறது. இதைப் புதுப்பிக்கும் நோக்கில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் ஒரு மாதக் காலத்திற்கு காசி- தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரப்பிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன. வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். இன்று தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம், டிசம்பர் 19 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது. 13 மொழிகளில் திருக்குறள் இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு புத்தகத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார். 76 இந்திய மொழிகளிலும் திருக்குறள் இதன் தொடர்ச்சியாக உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஐரிஷ், தாய், மலாய், பர்மீஸ், சுவிடீஷ், டேனிஷ், கொரியன், ஜப்பானிய உள்ளிட்ட 10 அயலக மொழிகளிலும் அஸ்ஸாமி, துளு, போஜ்புரி, சந்தாலி, கொங்கணி, பேடோ, சிந்தி, மைதிலி, மால்டோ உள்ளிட்ட 76 இந்திய மொழிகளிலும் திருக்குறள் வெளியாக உள்ளது. பிரதமர் மோடி, 100 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று மத்தியச் செம்மொழி நிறுவனத்திடம் விருப்பம் தெரிவித்ததே இதற்குக் காரணம் ஆகும். தஞ்சாவூரைச் சேர்ந்த முனைவர் எம்.கோவிந்தராஜன், இந்தியில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார். இவர் மொழி களை இணைக்கும் அலகாபாத் அமைப்பான பாஷா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பிரதமர் மோடியின் `சாக்ஷி’எனும் நூலை ‘அன்னையின் திருவடிகளுக்கு 2020’ எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, விளக்கம் சமஸ்கிருதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேராசிரியர் எஸ்.ராஜகோபாலன், அரபியில் ராமநாதபுரம் பேராசிரியர் ஏ.பஷீர் அகமது ஜமாலி, உருதுவில் சென்னை பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் அமானுல்லா, பாரசீகத்தில் இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி எஸ்.சாத்தப்பன் எனப் பலர் மொழிபெயர்த்துள்ளனர். இந்த மொழிபெயர்ப்பு அனைத்தும் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, விளக்கம், அருஞ்சொற்பொருள் விளக்கம் எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. இந்தநிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.,முருகன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இருபிராந்தியங்களிலிருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவவாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் போன்றோர் அறிவு மற்றும் கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். |
|||||
by Kumar on 19 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|