ஜூலை 15 ஆம் திகதி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக ஜி யு போப் பிறந்த இடமான பிறின்ஸ் எட்வேட் தீவுகளின் பெடேக் நகரில் அன்னாரின் உருவ சிலை ஒன்றை நிறுவியது கனடிய தமிழர் பேரவை.
ஆம் கனடிய தமிழர் பேரவையினரின் ஏற்ப்பாட்டில் தமிழ் மொழிக்கு பெரும் தொண்டாற்றி தமிழறிஞராய் வாழ்ந்து மறைந்த ஆங்கிலேயரான ஜி யு போப் அவர்களுக்கு அவர் பிறந்த இடமான பிறின்ஸ் எட்வேட் தீவுகளின் பெடேக் நகரில் அன்னாரின் உருவ சிலை ஒன்றை நிறுவியதுடன் மற்றுமொரு அவரது உருவச்சிலையை அங்கிருக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கும் வைக்கப்பட்டது!
CTC இனரின் அனுசரணையில் ராசாந்தன் அவரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட G U Pope அவர்களின் உருவ சிலையே பிறின்ஸ் எட்வேட் தீவின் பெடேக் நகரில் அமையப்பெற்ற அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் ஜி யு போப் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் கனடிய தமிழர் பேரவையின் முன்னை நாள் தலைவர் இளங்கோ, சிவம் வேலுப்பிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
|